கம்பன் வீட்டுக்கட்டுத்தரை

கம்பன்
வீட்டுக்கட்டுத்தரையில்
ஆட்டுப்புழுக்கையும்
அழகான இலக்கியமே!
கம்பன் சிந்தும்
கண்ணீரும் இலக்கியம் ஆகலாம்!
ஆனால்
கம்பரால் யாரும்
கண்ணீர் சிந்தியதில்லை!
அவ்வாறே
சிந்தியிருந்தாலும்
கம்பரை ஒருநொடி
கட்டி
அணைத்திருக்கலாம்! என்று அவர்கள்
நினைத்திருக்கலாம்!
அவர் வீட்டு
கட்டுத்தரையில்,
ஒருகாகிதம் கண்டதாய்
நினைத்து,
கனவு
கண்டிருக்கலாம்! மாட்டுச்சாணத்தில்
மறைத்துவைத்த
பேனா,
கம்பரின்
உள்ளங்கையில்
உரசிவிட்டதாய்
நினைத்து
உருகியிருக்கலாம்!
கம்பர்,
கல் உடைத்து
உழைத்திருப்பாரோ
சொல்
நிலைத்திருக்கிறதே!
கல்லாதவரை
உடைத்ததினால்
கைகள்
சிவந்திருக்கிறதே!
கல்உண்டவரை
கண்டதனால்
கண்கள்
சிவந்திருக்கிறதே!
என்று அவர்கள்,
கண்ணீர்
சிந்தியிருக்கலாம்!
விதவைகளின்
விறகைக்கண்டதினால்
ஆவிகள்
கூடியிருக்கும்
அர்த்தசாமத்தில்
சிவனின்பாதியாக
பீறிட்டுக்கொண்டார்!
பிருவங்களை
நெரித்துக்கொண்டு
கயவர்களை
கணித்துக்கொண்டார்!
வெண்குட்டையில்
வேய்ந்து கிடக்கும்
வெள்ளைச்சரிகைகளை
உடுத்திக்கொண்டு
கண்பட்டையாய்
காய்ந்துகிடக்கிறதா
காரிகைத்தட்டிகள்
என்று
பாரதிக்கும்
பசியை ஊட்டி
விட்டவரோ கம்பர்!
நிலம் செய்த
புண்ணியம்!
உழைத்தது போதும்
அய்யா!
கலைத்தது போதும்
அய்யா!
எனது
மடியில் சிறிது
நேரம்
ஓய்வெடுத்திட
வருவீர்களாஅய்யா!
சிறிது நேரம் மட்டும்
போதும் அய்யா!
கம்பர் அய்யா,
உறங்கிக்
கொண்டிருக்கிறார்
யாரும் சத்தம்
போடாதீர்......!!
உஷ்...!!