எப்போது நினைத்தாய்
உன்னிடம் ஒரு நாள்
சண்டையிட்டேன்
என்னை நீ நினைப்பதே
இல்லை என்று .
எப்படி கூறுகிறாய்
என்றாய் என்னிடம்.
எனக்கு விக்கல் எடுக்கவே இல்லை
என்றேன் கலக்கத்துடன்
சற்றே என் தலை கலைத்து
முத்தமிட்டு சொன்னாய்,
அதெல்லாம் எப்போதாவது
நினைப்பவர்களுக்கு தான் அப்படி,
நான் தான் உன்னை எப்போதும்
நினைத்து கொண்டிருக்கிறேனே
என்றாய் . . .
உன் வார்த்தைகளில்
உன்னை மீறி
மிதந்து வந்தது உன் அன்பு . .