ஒப்பில்லா உழவு...(கவிதை திருவிழா)

பகலவன் கதிரொளி
பட்ட இடம் பொன்னாக!
சோகத்தில் தலைசாய்ந்த
சூரியகாந்தி தலைநிமிர!

நிமிராமல் உழைக்கும்
கேள்விக்குரியாம்
உழவனின்
முதுகினில்
உதிக்கிறான் பகலவன்!

வள்ளலார் வாக்கை
வாழ்கையாய் கொண்டே
வாழ்கிறான் -அவன்
வாடுகிறான் வாடிய பயிறைக்கண்டே!

களத்துமேட்டில், கள்ளிக்காட்டில்
உலவுகிறான் உயிருள்ள
கூடாய் -நெல்மனியில் நம் பேரெழுதும்
பிரம்மா அவன்!

அவன்
ஆனைகட்டிப் போரடிதவன்!
வாழும்மட்டும் நீரிரைத்தவன்!
ஏர்பிடித்தே தோள்பெருத்தவன்!
ஊருக்கெல்லாம் உணவளித்தவன்!

எளிமை அவன் வாழ்வு!
ஏரும், பசுவும் அவன் சொத்து!
மறுசுழற்சிக்கு அவன் வித்து!
எருவில்கூட எடுத்தான் சத்து!

உங்கள்
வாழ்வு செளித்திடனும்!
உழவும் தொழிலும் வளர்ந்திடனும்!
இல்லாமை இல்லாமல் ஒழிந்திடனும்!
கிராமமும் நகரமாய் உயர்ந்திடனும்!

பூமித்தாயை
குளிரவைப்போம்!
உழவனை உழுதே
வாழ விடுவோம்!

எழுதியவர் : சரவணா (6-Jun-12, 4:20 pm)
பார்வை : 258

மேலே