நாங்கள்!

ஒரு நல்லவன்
ஒரு கெட்டவன்
ஒரு சோம்பேறி
ஒரு மகா புத்திசாலி
ஒரு பைத்தியம்
ஒரு நாத்திகன்
என்பது போன்ற
பிறரறியா முகங்கள்
ஒவ்வொருவருக்குள்ளும்
இருப்பினும்,
நாசூக்காக,
நாகரிகம் கருதி,
"நாங்கள்"
எனத் தன்னைக்
குறிப்பிடாமல்,
ஆணவக்காரன்
என்ற பட்டத்திற்கும்
அஞ்சாது,
கடைசியில்
"நான்" என்றே
முடிக்கின்றனர்.

எழுதியவர் : அக்னிபுத்ரன் (9-Jun-12, 1:53 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 181

மேலே