நான் நீ நாம்

எனக்குப் பிடித்தவன்
என்னைப் பிடித்தவன்
என்னைக் கவர்ந்தவன் - நீ

அரும்பு மீசையவன்
தமிழ்பால் குடித்த தமிழன்
இனிய எளிய செந்தமிழன் -கவிதை
எழுதிக் குவித்த கவிஞன் -அவன்

குளிர்காலத்தின் -கம்பளி
கோடைகாலத்தின் மென் தென்றல்
மழைக் காலத்தின் போர் குடை -அவன்
நான் நீ நாம் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (21-Jun-12, 2:45 pm)
பார்வை : 323

மேலே