ஈழம்: சோறுடைத்த சோழனின் பேரங்களுக்கு

கழிப்பறைகள் கட்டித் தராமல், கழிப்பதைக் கண்டு
களிப்பதிலே காலம் கழிக்கும் கயவர்களை
பழிப்பதைப் பாவமென்று சொல்கிறார்கள்.
இரக்கம் என்பதை மறந்த, இறந்த மனமுடையவர்களே
சிறந்த சிப்பாய்களாம் அங்கே,
பிணிகளில் இருப்போருக்கு இல்லை மருந்துகள்
தமிழர்கள் இறப்பதே விருந்துகள் அவர்களுக்கு,
வயோதிகர்களோடும் வளைவி அணிந்த
பெண்களோடும் சண்டையிடும் வீராதி வீர்ர்கள் அவர்கள்,
அணையாத அடுப்புகள் இன்றும் எரியும் தமிழகத்திலே
ஆனால் தமிழ் இனத்திலோ அது எரிவது வயிற்றில்,
சோறுடைத்த சோழனின் பேரங்களுக்கு
ஊரில்லை உறைவதற்கு
சோறில்லை உண்பதற்கு,
எவன் செய்த பாவமோ இறைவா உன் கழுத்திற்கும்
உறைவாள் வரும் இந் நிலை நீடித்தால்.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன், (21-Jun-12, 11:15 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
பார்வை : 171

மேலே