vetri
ஏன் ஓடுகிறாய்? என்னை கண்டு
நடந்து சென்றாய் பின் தொடர்ந்தேன்
ஓடி ஒளிந்தாய் தேடி பிடித்தேன்
கடலாய் மாறினாய் ஆறாக வந்து கலந்தேன்
மலையாய் எழுந்தாய் அருவியாய் பிறந்தேன்
மொழயாய் மாறினாய் எழுத்தாய் வந்தேன்
பூக்களாய் மாறினாய் பனித்துளியாய் மிதந்தேன்
ஓவியமாய் மாறினாய் வண்ணங்களாய் மின்னிநேன்
என்றாலும் உன் விழிகள் என்னை காணவில்லை
உன் நிமிடங்கள் என்னை சிந்திக்கவில்லை
உன் கண்கள் தேடும் காவியமாய் நான் இல்லையா?
உன் உணர்வுகள் தேடும் உறவாய் நான் இல்லையா?
வலிகள் பல தந்தாய். ஏன் என்றேன்?
''வெற்றி என்றும் வலியோடு பிறந்திடும்'' என்றாய்.
உன் பிறபிற்காக kaathu kondirukinraen...................
கண்ணீர்துளிகள் கலந்த nambikaiyodu