சிலுவையில் அறையப் படுகிறாய்

இயந்திரங்கள்
இல்லை
மனிதர்களெல்லாம்
இயந்திரங்களாய்!

இதயம்
தொலைத்தவர்களாய்
கணினி, மின்னஞ்சல்
இணைய தளம்!

எல்லாம் நியுட்டனின்
விதியை மிஞ்சும்
அளவிற்கு
வளர்கின்ற உலகில்
இதயம் தொலைத்தன
தொலைக்காட்சியிலும்
கை பேசியிலும்!

ஏ! மானிடனே!
மானிடம்
காயம் பட்டுத்தான்
வாழ்க்கையைத்
தேட வேண்டுமா?

மாசுபட்டுதான்
மானிடம் தேட
வேண்டுமா!
நீ உயர்வாய் இரு
மானிடனாய்!

நீதி மறுக்கப்பட்டால்
ஏழைகள் வஞ்சிக்கப் பட்டால்
நிரபராதி தண்டிக்கப் பட்டால்
நீ உரிமைக் குரல்
எழுப்பிவிட்டால்-நீ
சிலுவையில் அறையப்
படுகிறாய்
ஒவ்வொரு நாளும் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Jun-12, 6:25 am)
பார்வை : 221

மேலே