விடியற்காலை நிலா உதயம்......!

கடையாணி இல்லாத பூளோகத்தில்
நுகத்தடி இல்லாமல்
காலன் என்னை கட்டிவிட்டு
கடகடவென சுழற்றியதில்
நானும் அவதாரம் பூசிக்கொண்டேன்......,
நரைத்த முடியை மறைக்க மயிர்ச்சாயம்
சுறுங்கிய தோல் மறைக்க முகச்சாயம்.......,
என்னதான்
அரிஹராம் பூசினாலும்
ஊன்றுகோல் கொண்டு நடைபயில ..........
ஆனாலும்
மனம் மட்டும்
ரயில்களின் ஜென்னல் சீட்டுக்கு
ஆசை படும் அற்பனாக....,
வாசிக்க வாங்கிய
வார இதழ்களையும், புத்தகங்களையும்
என்னிடமிருந்து
வாங்கிவிட்டார்கள்....... இலவசமாக ..... !!!!
அது சரி.....,
இங்கே......
இலவசகளுககதான் இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் ....,!!!!!
பக்கத்தில் அமர்தவன்
பக்தனாய் தோன்றவில்லை!!!!! ........,
ஆனாலும்
கைகளால் இறுக்கி பிடித்து
பக்தனின்
கண்களுக்கு
காட்சியளிக்காமல் தரிசனத்தை மறைத்தேன்!
பாலை விட அதிக
விலைக்கு வாங்கிய தண்ணீர் பாட்டில்கள்!!!!!.....,
பயணத்தை முடித்து
வீடு வரும் பொது
எதையோ இழந்த உணர்வுகள் ......,
அரும்புமீசை எட்டிபார்த்த
அழகான நாட்களில்.....
அன்றைய ரயில் பயன்களில்
திருட்டுதனங்கள் தித்தித்தது
திட்டும் வார்த்தைகள் பிடித்தது
அடித்து விளையாடும் தோழி
இரவு நேரத்து குழந்தைகளின் அழுகை
என்னவோ தெரியவில்லை-தேட
காரணங்கலும் கிடைக்கவில்லை
ஒரு வேளை
அன்று
"நான்"- நானாகவே இருந்தேன்...
இன்று
நான்-" வியபாரியனேன்".