யார் இவன் ? (பகுதி - 2)

இவன்,

விதியை வரையறுத்து
விளையாட்டைத் துவக்கிய,
கண்ணனு மல்ல!

இரைகண்டு இனிகொண்டு
ஆட்டத்திற்க் கிரையாகும்,
துரியோதனனு மல்ல!

வாய்ப்புகளனைத்தும் பரிசாய்ப்பெற்று
வகுத்தக் கோட்டில்விளையாட,
அர்ச்சுனனு மல்ல!

கவசங்களனைத்தும் துறந்தும்
கோட்டிற்கு வளையாத,
கர்ணனு மல்ல!

யார் இவன்....?
சிலநேரங்களில்,
ஏட்டுக்குப் போட்டியாய்
எமனுக்கு வேட்டியாய்
விதிக்கு வழிகாட்ட விழிகொடுப்பவன்?

யார் இவன்...?


- A. பிரேம் குமார்

எழுதியவர் : A. பிரேம் குமார் (4-Sep-12, 2:01 am)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 232

மேலே