காதலியின் கல்யாணம்

நீ ஈந்த நினைவுகளின்
நீர்ச்சுழியில்
சிக்கி இன்னும் மீளாமல்
சாகின்றேன்,
கடந்துசெல்லும் பொழுதுகளின்
பொறிகளுக்குள்
தொலைகின்றேன்
உன் வருகை தேடியே...
மணமுடித்த சேதிதனை கேள்வியுற்று
பிணமாக ஆகிப்போவேன் விரைவினிலே,
எனக்கில்லை நீயென்று ஆனபின்பு
இருந்தென்ன செத்தென்ன இன்னமும்தான்...
கண்ணாக கரம் பிடித்த கணவனுன்னை
கலங்காது காத்திடவும் வரம்வேண்டி,
கோரிக்கை கொண்டுசெல்வேன் இறைவனிடம்
காணிக்கை என் உயிர் சில நொடியில்...