"என் அம்மாவுக்காக"kavipriyan

வெட்டி போட்ட
வெறகயெல்லாம்
விக்காம வச்சுருந்தா
ஆயிசுக்கும் அடுபெரியும்....
எங்கம்மா வைக்கலயே
ஒவ்வொரு நாளும்
வெறகு வெட்டித்தா
வீட்ல அடுப்பெரிக்கும்...
என்னைக்காவது
வெட்டாம போன
வெட்டுன வெறகு
விக்காம போன
எங்க வீட்டு அடுப்பு
அனஞ்சுகேடக்கும்...
அத்த,மாமா,
சொந்தம்,பந்தம்
அத்தன பேரிருந்தும்
அஞ்சுபைசா கேட்டதில்ல....
அரவயிரும் காவயிருமா
எங்கம்மாதா என
படிக்க வைக்காங்க...
அவங்க சிந்துன கண்ணீர
அப்படியே
பிடிச்சு வச்சுருக்கே
கண்டிப்பா ஒருநாள்
நா சாதிப்பே
அப்போ
பன்னீரோட
எங்கம்மா கண்ணீரையும்
நா கலந்து
ஒவ்வொரு துளியையும்
நெனச்சுப்பாத்து
என் தெய்வத்த
பாக்கவர சொந்தங்களா
அந்த பன்னீரால வரவேற்பேன்....
அதுபோதாது
ஆயிரம் ஜென்மம்
எங்கம்மாவுக்கு நா
மகனா பிறக்கணும்.....
அப்பாவும் தீராதே
எங்கம்மாவுக்கு நா பட்ட கடன்.......!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (11-Sep-12, 10:20 am)
பார்வை : 156

மேலே