ஆதரவு இல்லையோ
யார் கண் பட்டதோ
பச்சைமரம் பட்டுப்போனது
நோயுற்று மெலிந்துபோனது
இலைகள் இழந்து வெறுமையானது
அன்றாடம் வரும்
பறவைக்கூட்டம் கடந்துசெல்ல
நிழல் தேடிய கூட்டமும்
கண்டுகொள்ளாது நடந்துசெல்ல
தனிமையில் நிற்கிறது
தவிப்போடு தனிமரமாய்
ஆதரவின்றி நின்றிடும்
யாருமற்ற அனாதையாய் !!!