ஆதரவு இல்லையோ

யார் கண் பட்டதோ
பச்சைமரம் பட்டுப்போனது
நோயுற்று மெலிந்துபோனது
இலைகள் இழந்து வெறுமையானது

அன்றாடம் வரும்
பறவைக்கூட்டம் கடந்துசெல்ல
நிழல் தேடிய கூட்டமும்
கண்டுகொள்ளாது நடந்துசெல்ல

தனிமையில் நிற்கிறது
தவிப்போடு தனிமரமாய்
ஆதரவின்றி நின்றிடும்
யாருமற்ற அனாதையாய் !!!

எழுதியவர் : (18-Sep-12, 7:43 pm)
பார்வை : 200

மேலே