பண மரங்கள்

வளர்பவைகள் எல்லாம்
பூப்பதில்லை
பூப்பவைகள் எல்லாம் காய்ப்பதில்லை .....!

சில
வேலி தாண்டிய மரங்கள்
வெளிநாடுகளில்
பூப்பூத்து மணம் வீசுகின்றன....!

இங்கு வளர்ந்துவிட்டு
அக்கரை பச்சையென
அங்கு போய் காய் காய்க்கின்றன
வேர்கள் மட்டும்
இங்கு வெய்யிலில் காய்கிறது ....!

அடுத்த வீட்டுக்கு
குடையாகட்டுமெனில்
வாரிசுகளை வளருங்கள் ....!

ஆணி வேர்கள் இங்கிருக்க
மாமியார் வீடுகளில்
காய்த்து கனிகள்
கொடுத்து மகிழ்கிறது சில மரங்கள்...

நீண்டு விட்டாலே
சிலபேர்
வலைந்து தான் போகிறார்கள் ...

மகன்களை வளர்க்காதீர்கள்
அவர்கள்
மருமகள்கள் மடியில்
காய்களையும் கனிகளையும்
அடைகாத்து விடுவார்கள் ....!

மகள்களை வளர்க்காதீர்கள்
அவர்கள்
அடுத்தவர் இல்லங்களுக்கு
சுருட்டிக்கொண்டு பறந்து விடுவார்கள் ...

ஆகவே
பண மரங்கள் வளருங்கள்....

வாரிசுகளை வளர்க்காதீர்கள்
அவர்கள்
பெருவிரல் ரேகைக்காக
கைகளையே களவாடி விடுவார்கள் ...!

பிள்ளைகளுக்கு
அரசாங்கம்
சோறு போட்டுவிடுவார்கள்
நீங்கள்
பண மரங்களை மட்டுமே
பாதுகாப்பாக வளருங்கள் போதும் ..!

பண மரங்களை
வளர்ப்பது வாரிசுகளை
வளர்ப்பதை விட எளிது ...

தபால் நிலையங்களில்
வங்கிகளில்
LIC - களில்
வளருங்கள் பண மரங்களை ...!

ஆழமர விழுதுகள்
அங்குமிங்கும் படர்ந்தாலும்

பண மரங்களின் தாலாட்டுதலில்
முதுமை தூரிகளில்
சற்றே இளைப்பாறி மகிழலாம் ....

ஆகவே
வீட்டுக்கு வீடு
பண மரங்கள் வளருங்கள் ...!

எழுதியவர் : வெற்றிநாயகன் (22-Sep-12, 4:51 am)
பார்வை : 294

மேலே