தங்கையின் நினைவு நாள் !
நான்காம் தேதி ஜனவரி
என் மனதில் ஏற்பட்டது கனவரி !
இன்று...
மலராது என்று நினைத்த
செடியில் மலர்ந்த
என் தங்கை எனும் மலர்
உதிர்ந்த தினம்.
அம்மா இங்கு இருக்க
அப்பா இங்கு இருக்க
அண்ணனும் இங்கு இருக்க
தங்கையே நீ மட்டும் எங்கே..
நிலாச்சோறு உண்ணும் வயதில்
நிலவோடு கலந்தாயோ..
நட்சத்திரங்களை பார்த்து
கையசைக்க வேண்டிய நீ
நட்சத்திரமாய் ஆனாயோ..
அழுகையை காணாத அழகே
எங்களை அழ வைத்து சென்றது ஏன்?
குட்டி தேவதையே
எங்கு சென்றாய் நீ....?
முத்துக்களும் முகம் சுழிக்கும்
உன்
முன் பற்களை பார்த்தால்,
பிரம்மனும் ஆச்சரித்தன்
உன் முகத்தில்
இரண்டு வானவில்கள்
உன் புருவங்கள்..
பாற்கடலில் நீந்தும்
கரும் மீன்கள்
உன் கண்கள்.
ரோஜா இதழ் போன்ற
உன் இதழ்கள்
எனவேதான்
சிரிப்பு எனும் பூ
உன்னிடம் மலர்ந்தே இருந்தது..!
முழு நிலவு இரண்டு துண்டாகி
காதுகளாய் ஆனதோ..?!
சிகப்பு சூரியனின்
அரை துண்டு உன் நெற்றி..
வினாக்குறி போன்ற
மூக்கை உடையவளே..!
எங்கள் மனதில்
ஆச்சரியக் குறியாய் உள்ளாய்..!
தாமரை போன்ற
முகத்தினை உடையவளே..
இன்று தாமரை
கசங்கியது ஏன்...?
எங்களை விட்டு ஏன் இறந்தாய்..?
இறந்து விட்டாயா...?
யார் சொன்னது ?
காலை உதிக்கும் சூரியன்
செங்கதிரை வீசுவது போல்
எங்கள் மனதில்
மகிழ்ச்சிகதிரை வீசிக்கொண்டு
உதித்தவளே..!
அந்தி வேளையில் மறையும்
சூரியன் போல் நீயும்
சென்று மறைந்துள்லாய்..!
இறக்கவில்லை..
மீண்டும் நீ உதிப்பாய்
என் மகளாய்...
காத்திருப்பேன்
அந்த விடியலுக்காக..
சோகம் எனும்
இருட்டில்...