இயற்கை

உனது சிரிப்பினை கண்டு சிலிர்த்தேன்
உனது பரிவுக்காக நான் காத்திருந்தேன்
உனது மடியில் இறக்க தவமிருந்தேன்

எனது உறவு அதை தடுத்ததோ! இல்லை !!
எனது பயம் என்னை தடுத்ததோ! இல்லை !!

நான் இறக்கும்முன் உன் கரம் பிடிப்பேன்
என் உயிர் துறந்து உனக்கு உயிர் கொடுப்பேன்
என் பூஜை அரை கடவுளே
உன் பதத்திற்கு பூஜை செய்ய என் கண்ணீர் துளி போதுமோ
என் உயிரே உனக்கு தானே
என் நினைவும் நீ தானே
என் வாழ்கை நீ தானே
என் வசந்தம் நீ தானே

எனது குளிர் காலம் நான் உன்னை காணும் போது
எனது இலைஉதிர் காலம் நான் உன்னைவிட்டு பிரியும் போது
என் மழைக்காலம் உன் சிரிப்பு ஒழி கேட்கும் போது
என் பருவநிலைகளை தீர்மானிக்கும் எனது இயற்கை கடவுளே நீ எங்கு இருக்கிறாய்

எனது பொற்காலம் எப்போது நீ அறிவாய்
அதை நீ எனக்கு கொஞ்சம் சொல்ல கூடாத

எனது காலம் உன்னால் தீர்மானிக்க படுகிறது என்பதை நான் அறிவேன்


இயற்கை

எழுதியவர் : இயற்கை விரும்பி (29-Sep-12, 6:28 pm)
சேர்த்தது : dineshkumarbhakthavachalam
Tanglish : iyarkai
பார்வை : 289

சிறந்த கவிதைகள்

மேலே