ஏழையின் கனவு
ஒரு இளைஞனின் கனவு
பெரும்பாலும்
காதல்
சில்மிசமாகதான்
இருக்கும் !
ஒரு கலைஞனின் கனவு
பெரும்பாலும்
ஒரு சிறந்த கலைஞன் என்று
பெயரெடுக்க வேண்டும்
என்பதாகத்தான் இருக்கும் !
ஒரு அரசியல்
தலைவனின் கனவு
தேர்தலில் போட்டியிட்டு
ஜெயித்து ஆட்சியை
பிடித்துவிடவேண்டும்
என்பதாகத்தான்
இருக்கும் !
ஒரு விவசாயின் கனவு
வானம் பொழிந்து விடாதா
பூமி விழைந்து விடாதா
என்பதுதான் !
ஆனால் !
ஒரு ஏழையின் கனவோ
மூன்று வேளை உணவு
என்றாவது ஒருநாள் இந்த
பாழாய்ப்போன
வயிற்றுக்கு
கிடைத்து விடாதா
என்பதுதான் !
-------------------------------------------------
அன்புடன் - சிங்கை கார்முகிலன்