பூப்பது எப்படி ?

இரவு நேரம்
இரு விழிகளும் இனைய
விடியல் மெல்ல நெருங்கி
பிரித்து விட
மொட்டுக்கள் பூவாகும்
ஓசை மட்டும் கேட்கவில்லை
வண்ணங்கள் பூசிய தேவதை
எப்படி மலர்கிறாள்
என வியக்கிறேன்!
வண்டுக்கு மட்டும்
எப்படி காற்றில் தூது ?
இது இயற்கை மனிதனுக்கு
காட்டும் கண்ணாம்பூச்சி ஆட்டமோ?
எனக்கு ஒரு கர்வம் உண்டு
அழகில் சிறந்தவளாய் இருந்தாலும்
நீ குடியேறும் இடம்
பெண்ணின் கூந்தல் தானே !
பெண்ணுக்கு காத்திருந்து
நீ உதிர்ந்த கதை
எனக்கு தெரியும் !
ஆனால் ஒன்று மட்டும்
எனக்கு பொறாமை !
அழகை சுமப்பவள் எப்படி
தேனையும் சுமக்கிறாள் என்று !

எழுதியவர் : ஷெரில் (5-Oct-12, 12:42 pm)
பார்வை : 173

மேலே