நானும் ஒருவன்!!!

நிலத்தினை போல் திட உடலை பெற்றோம்...
நீரினை போல் ஓடும் குருதி பெற்றோம்...
நெருப்பினை போல் சீரன உறுப்பு பெற்றோம்...
உருவமில்லா காற்றை உள்வாங்கும் உறுப்பு பெற்றோம்...
நிலையான ஆகாயம் போல் ஆத்மாவை பெற்றோம்...

ஆனால் ஏனோ!!!

நிலையில்லாத மேகமாய் நிதமும் தோன்றும் எண்ணங்களால் எழமுடியா பள்ளத்தில் விழுந்து கிடக்கும் மானிடரில் நானும் ஒருவன்!!!

எழுதியவர் : விஜய்_தஞ்சை (19-Oct-12, 3:38 pm)
பார்வை : 167

மேலே