என்ன பாவம் செய்தோம்?

என்ன பாவம் செய்தோம் - நாங்கள்
என்ன பாவம் செய்தோம்?

தூங்கவும் முடியவில்லை துணிந்து
தொழில் தொடங்கவும் முடியவில்லை
படிக்கவும் முடியவில்லை பணிக்கு சென்று
வயிற்றை கழுவவும் முடியவில்லை

பொங்கும் வேர்வையில் பெண்கள்
மங்கிய பார்வையில் முதியோர்
புழுங்கும் வெப்பத்தில் துடிக்கும்
புரிய பச்சிளம் குழந்தைகள் ....

கொஞ்சமும் சிந்தனை இன்றி
ஆண்டிடும் அரசியியல் வாதிகள்
வீட்டிலோ கார்களும் ஏசியில்
மக்களோ நடுதொரு வீதியில் ....

எங்கு நோக்கினும் இருட்டு
இதனால் நடக்குது திருட்டு
இதற்கா அமைத்தோம் அரசை
இனிமேல் இவர்கள் எதற்கு ....

அடிப்படை வசதிகள் கொடுத்து
அரசாண்டு இருப்பான் ஆங்கிலயன்
என்றைக்கோ அவனமைத்த பாதையில்
இன்றைக்கும் பயணிக்கும் ரயில்கள் ...

விழித்தெழு மனிதா விழித்தெழு
வீறுகொண்டு நீயும் விழித்தெழு
தகர்த்தெறி மனிதா தகர்த்தெறி
தடைகளை உழைத்து உயர்ந்திடு .....

--------------------சரவணகுமார் தாம்சன்...

எழுதியவர் : -சரவணகுமார் தாம்சன்... (21-Oct-12, 9:28 pm)
பார்வை : 216

மேலே