நானொரு விதை

----- நானொரு விதை ----

என்னை புதைப்பதாக
தீர்மானித்தால்.....
அவ்விடத்தில்
குறைந்தபட்சம்
குடிசை அமைத்து கொடுங்கள்
ஒரு தொழு நோயாளிக்கு.

உருப்புதானம் செய்த
உடலை
எரிப்பதாக உத்தேசித்தால்....
மலை உச்சியில் போடுங்கள்
கருவுற்று இருக்கும்
கழுகுகள், மிருகங்கள்
பசியாரட்டும்.

எனக்கு கல்லறை
எழுப்ப வேண்டாம்
நான் இன்னும்
சாகவில்லை.

---தமிழ்தாசன்---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (22-Oct-12, 1:13 pm)
பார்வை : 163

மேலே