காதல் ஏக்கம்

கணப்பொழுதில் நிகழும் மாயம்...
அந்தி சாய்ந்து, இருள் மங்கிய
சந்தியா காலத்தில்,
கண்டேன் அவனை...
காத்திருப்பின் இலக்கணம் புரிந்தது,
எனக்கான அவனின் காத்திருப்பில்...
இமை அகலாமல் ரசித்தேன் அவனை...
அவன் எனை பாராதபோது,
மூன்றரை நேரப் பயணம்
மூன்று வினாடிகளில்
முடிந்தது போல் தோன்றியது...
முப்பது கோடி ஆண்டுகளானாலும்
அவனருகே இருந்த நொடிகள்
திரும்ப வராது...
அந்த பயணம் இன்னும்
நீண்டிருக்க கூடாதா என்ற ஏக்கத்தில்,
கண்கள் அயர்ந்தால்,
கனவிலும் அவன்....!
போதுமடா....
சிறிதாவது இரக்கம் காட்டு என்மேல்...

எழுதியவர் : கவிநிலா (2-Nov-12, 8:50 pm)
Tanglish : kaadhal aekkam
பார்வை : 321

மேலே