108

உயிர் போகும் நிலையில் உடன் வருவான்.....
உயிரை காப்பாற்றி நிலை பெறுவான் மக்கள்
மனதில்....................

அழைத்தவுடன் ஓடி வருவான் மின்னல் போல...
அழகாய் நம்மை தாங்கி செல்வான் ஒரு
தாயைப் போல...................

குழந்தை அழைத்தாலும் ஓடி வருவான்........
இளங்குமரி அழைத்தாலும் ஓடி வருவான்.......
இளைஞர் அழைத்தாலும் ஓடி வருவான்...........
படு கிழவர் அழைத்தாலும் ஓடி வருவான்........

வயது பேதம் பார்க்கமாட்டான்.......
வகுப்பு வதம் பேசமாட்டான் ..........
உயிர்போகும் நிலை கேட்டால் உடனே
ஓடி வருவான்! தன் குழந்தை போல்
உன்னை தூக்கி செல்வான் .........

மருத்துவமனை செல்லும் முன்னே
இவனுள் மகவை பெற்றோர் ஏராளம்..............

எமனுக்கும் சவால் விடுபவன் எவன்.........
எங்கள் உயிர் காக்க போரிடும் இவன்............

சதி மத பேதமெல்லாம் இவனுக்கு தெரியாது.........
சண்டைக்காரன், வம்புக்கரன் இவனுக்கு புரியாது..........

இவனையும் வெட்டியாய் அலைகளிப்போர் உண்டு........
அவர்களுக்கும் உதவி தேவைப்படும் எப்போது.???
இவனது அருமை புரியும் அவர்களுக்கு அப்போது............

மூன்று எண்களை அழுத்தினால்
கண் முன்னே வந்து நிப்பான்..................
அவன்தான் எங்கள் 108 அவசர ஊர்தி......................

எழுதியவர் : முகவை கார்த்திக் (5-Nov-12, 4:27 pm)
பார்வை : 128

மேலே