பிரிவோம் சந்திப்போம் கல்லூரின் கதை

கல்லூரி-
இது - கனவுகளின் பிறப்பிடம்
இளைய சமுதாயத்தின் வசிப்பிடம் !
அன்று-
கல்லூரி வாசம் - நண்பர்களின்
சுவாசம் - இது
நந்தவன தேசம்
இன்று -
நெஞ்சில் ஓரம் - நீயங்காத பாரம்
பிரியும் நேரம் - இது !
கண்ணீரின் ஓலம்..!
நட்பு என்ற நெருப்பில் உருகி
கலைந்தோம் - இனி !
லட்சியம் என்ற வார்ப்பில் உருவெடுப்போம்!,,
இது வெறும் கல்லூரி மட்டுமல்ல !
கடந்த கால நினைவுகளை - சுமந்து
நிற்கும் கால - கண்ணாடி !
எங்கள் கல்லூரி நட்பு ஒன்று சேர்ந்து
கைகோர்த்தபடி சில வருடம் - பல!
மைல்கள் சென்று விட்டோம்.
திரும்பி பார்க்கிறோம் - திசை
மாறும் பறவைகளாக பிரிகிறோம் !..
நீங்கா நினைவுகளுடன் நிலைத்திருக்கும் -
இந்த தருணம் !..
என்றென்றும் உங்கள் நினைவுகளில்
இந்த கல்லூரி ஓர் நந்தவனம் !..