நல்லவை நினைவில் கொண்டால்...

நல்லவை மறப்பதற்கில்லை
அல்லவை நினைப்பதற்கில்லை

நல்லவை நினைவில் கொண்டால்
நாள் கடப்பது தெரிவதில்லை

அல்லவை நெஞ்சில் நின்றால்
தொல்லைகள் விடுவதில்லை

இன்றைய பொழுது நன்றெனவே
என்றும் நெஞ்சம் நினைக்கையிலே
எல்லா பொழுதும் இனிதாய் செல்லும்

நாளைய பொழுது என்ன நடக்கும்
எனும் நினைவே தினமே கொண்டால்
எல்லா பொழுதும் வீணில் கழியும்

காலம் என்பதை கடன் தருவாரில்லை
காசு கொடுத்தால் கடையில் கிடைப்பதில்லை

இருக்கும் காலம் எண்ணிச் செலவழி
விரயம் என்றால் வருமோ காலம் இனி?

எழுதியவர் : சொ. சாந்தி (15-Nov-12, 10:57 pm)
பார்வை : 142

மேலே