என் உயிரே!

உன்னை சந்திக்கும் போது
கருக்கொள்கிறது!
உன்னை பிரியும்போது
கவிதையாய் பிறக்கிறது!....

தினம்தோறும் துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு!....

உன் நினைவை சுமக்கின்ற நான்
நானாக இல்லையே!....
நான் கல்லறையில் புகுமுன்
என் அருகில் வந்துவிட மாட்டாயா!...

எழுதியவர் : ஜோதி (7-Dec-12, 8:35 am)
பார்வை : 133

சிறந்த கவிதைகள்

மேலே