கல்லறை கண்ணீர்த் துளி

இதயமும் வலித்தது
நீ ஆறுதலாய் இருந்த வரை
உதடுகளும் பிரிந்தது
நீ மகிழ்ச்சியாய் இருந்தவரை
கால்கள் களைத்தது
நீ நடையாய் நடந்தவரை
கண்களும் அழுதது
நீ கண்ணீரை துடைக்கும் வரை
மனமும் மயங்கியது
நீ மறுதலித்து நின்றவரை
கைகளும் எழுதியது
நீ என்னவளாய் இருக்கும் வரை
சுவாசம் நிலைத்தது
என் உயிர் உன்னிலிருந்து பிரியும் வரை
இன்று கல்லறைக்குள் கவி பேசி கலங்கி காலம் கடத்துகிறேன் உன்னிலிருந்து பிரிந்த என் காதலை
கல்லறையில் எழுதுங்கள்
கல்லறை சுவாசத்தின் கண்ணீர்த் துளி என்று
என்னவளுக்காக இன்று இல்லை இல்லை என்றும் உதிரும் அவளின் உயிர்த் துளி