இது லிமரிக்?-கே.எஸ்.கலை

அடை மழையோடு இடி மின்னல்
மாடியில் திரை மூடியபடி யன்னல்
சல்லாபத்துக்கு வேலைக்காரி
உமிழத்தகும் முகத்தினில்காறி
கட்டியவளுக்கு ஏன் இந்த இன்னல் ?

★★★★

ரத்தம் குடிக்கும் அரக்க இனம்
சுத்தம் இழக்கும் மனித மனம்
தாங்காதே பூமி
தூங்குதோ சாமி
எப்போது மாறும் மிருக குணம் ?

★★★★

(இது லிமரிக் எனும் கவிதை வடிவில் எழுத மேற்கொண்ட முயற்சி-லிமரைக்கூ அல்ல )

எழுதியவர் : கே.எஸ்.கலை (17-Dec-12, 6:58 pm)
பார்வை : 272

மேலே