பூத் துளிகள் – கே.எஸ்.கலை

வண்டுக் காதலன் முத்தத்திற்கு
தண்டுக் காலில் தவமிருகின்றன
மகரந்தப் பூக்கள் !

நிலவுத் தாய் குளிர்ப்பாட்டி
சூரிய தந்தை தலை துவட்டிடக் காத்திருக்கின்றன
வைகறைப் பனிப்பூக்கள் !

உயிரில்லை...
உணர்வுகளுக்கு உயிரளிக்கிறது
நெகிழிப் பூக்கள் !

வாசமில்லை...
நெஞ்சில் சந்தோஷ வாசம்....
காகிதப் பூக்கள் !

சடலமான பின்னும்
சிரிக்க மறக்கவில்லை
பூச்சாடிப் பூக்கள் !

மறந்துவிட்டார்கள்
மறக்காமல் கண்ணீர் வடிக்கின்றன
சுடுகாட்டுப் பூக்கள் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (28-Dec-12, 8:39 am)
பார்வை : 375

மேலே