உள் அன்பில் உவகை.

உண்மையான அன்பு என்பது,

உதடுகளைப் பிரிக்காமல்,
வார்த்தைகளை விரிக்காமல்,
உள்ளத்தில் ஒருமையுற்று,
எண்ணத்தில் வறுமையுற்று,
எங்கும் அலையாமல்,
எதுவும் வேண்டாமல்,
எப்போதும் மோனமுற்று,
ஆனவரை அமைதியுற்று,
அகமெங்கும் அற்புதமாய்,
அந்தமில்லா ஆனந்தத்தை,
சொந்தமாக்கிக் கொள்ளுவதே!

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி (28-Dec-12, 2:53 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 108

மேலே