".....வெற்றி மொழி "......
அன்பை வெளிப்படுத்து
அன்னையாவாய்
இருப்பதை கொடு
கர்ணனாவாய்
சிக்கனமாய் இரு
சிறப்பாய் வாழ்வாய்
மன்னித்துவிடு
மகானாவாய்
மறந்துவிடு
மகத்துவம் பெறுவாய்
சிந்தித்துவிடு
சிகரம் தொடுவாய்
மண்ணை காப்பாற்று
வீரனாவாய்
கொள்கையை செயல்படுத்து
அரசனாவாய்
வலிகளை தாங்கு
மனஉறுதி அடைவாய்
முயற்சி செய்
முன்னேற்றம் காண்பாய்
சாதித்துகாட்டு
சரித்திரம் படைப்பாய்
பெற்றோரை வணங்கு
நல்ல மனிதனாவாய்
தமிழ்மொழியை சுவாசி
தமிழனாவாய்
தாய்நாட்டை நேசி
நல்ல குடிமகனாவாய்
நம்பியோரை கைவிடாதே !
கடவுளாவாய்
கற்றோரை மதி
நல்ல மாணவனாவாய்
தடைகளை தகர்த்திவிடு
புதிய தகவலை
உலகிற்கு கொடு ......!!!!!!!
தோல்வியை
வெற்றிக்கு அடித்தளமாக்கி
வெற்றிக்கு
உன்னை முகவரியாக்கு .....!!!!!!!
எனக்கு விதிக்கலாம்
தடை இவ்வுலகம்
ஆனால் ....,
என் கனவுகளுக்கு அல்ல .....!!!!!!