மல்லிபூ போதுமடி நமக்கு...

காகித பட்டும்
காலில் சலங்கையும்
கண்ணாடி வளையலும்
கண்ணிற்கு மையும்
கன்னங்களில் வண்ண பூச்சும்
இதழ்களில் ரசாயன கலவையும்
வட்டமான முகத்தில்
வளைந்த பொட்டும்
வண்ண அணிகலன்களும்
எதற்கு??????
மணாளனை மயக்க ஒரு முழம்
மல்லிப்பூ போதுமடி நமக்கு.....

-PRIYA

எழுதியவர் : PRIYA (30-Dec-12, 5:37 pm)
பார்வை : 247

மேலே