ABDUL BACKI - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ABDUL BACKI |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 22 |
முகம் மூடியே
இதயம் திறக்கிறாய்
உயிர் நாடியில்
காதல் கலக்கிறாய்
நிற்காமல் போகாதே
நிற்கிறேன் உனக்காக
சாலைகள் தூரம் போகும்
காதல்கள் போகாது
கல்லூரி புத்தகம்
சுமப்பவளே
காதல் புத்தகம்
சுமப்பாயோ
இதயத்தால் எழுதி
யிருக்கிறேன்
காதல் நூலகங்களில்
படிப்பாயோ
விழிகளில் பசிக்குது
உன்னால்
வழிகளில் உரசுது
பெண்ணால்
விரும்பிய இதயத்தை
திரும்பாத நீ
நீதிரும்பிய இடங்களெல்லாம்
நான் விரும்புகிறேன்
அரியரை போலவே
என் காதலும்
திருத்த திருத்த
மதிப்பெண் இழக்குது
கல்லூரிக்கு விடுமுறை
யிட்டார்கள்
காதலுக்கு விடுமுறை
யார் விடுவது...
இளம் கவியரசு : அப்துல் பாக்
அறுவடைக்காக நீண்டகைகள்
அனுமதிகேட்டு நீளுது
தலைநகர் டெல்லியை விவசாய
தலைகள் சூழுது
கதிரருவா தீர்ப்பை கிழிக்கட்டும்
விவசாயி இரத்தம் பாராளுமன்றத்தை
நனைக்கட்டும்
கலப்பைகள் தலைநகரை
உழுவட்டும்
மெதுவாய் அங்கே பசுமைகள்
முளைக்கட்டும்
விதைத்தவனை புதைக்காதீர்
அரிசி தந்தவனுக்கு
வாய்கரிசியை தூவாதீர்
வேளாண்மையை வேலால்
குத்தாதீர்
வேர் இல்லையெனில்
பசுமைகள் இல்லை...
இளம் கவியரசு : அப்துல் பாக்கி
துள்ளி குதிச்சு
வானம் தொடு
மெல்ல இழுத்து
பூமியில் நடு
கைகள் பதித்து
நீலம் எடு
கால்கள் பதித்து
சுவடுகள் இடு
பந்து வீசி
நிலவை பிடி
வந்து பேசும்
மீடியா வெடி
மலையின் மீது
மழை சாரலாய் வா
அலையின் மீது
நுரை தூறலாய் வா
பாதம் பூட்டாதே
பாதை திறந்து வா
வேர்போல் உறுதி
கொள்
ஏறுபோல் உழுது
வா
விரல்களால் தீ
மூட்டு
விழிகளால் ஒளி
கூட்டு
சூரியனை இமையில்
அணை
வியர்வையால்
தோல்வியை நனை
பொங்கி எழு
தேங்காதே
முங்கி விழு
தூங்காதே
விழுந்த கண்ணீர்
விதையாய் போனது
வடிந்த காயங்கள்
விருதாய் மாறுது
தெளிந்த தண்ணீர்
தீர்த்தம் ஆனது
நிமிர்ந்த
காய் தந்தவையின்
கர்ப்பம் கலைக்கப்பட்டது
உயிர்போன வேர்களுக்கு
இடையில்
தனிமை படுத்தப்பட்டன
குருவிகளின் வீடுகள்
அணிலின் மாடி வீட்டு
படிக்கட்டுகள் இடிந்து
போனது
புறாக்களின் ரகசிய
மெத்தைகள் கிழிந்து
போனது
வௌவால்களின் ஊஞ்சல்கள்
அறுந்து போனது
காகங்களின் கூட்டாண்மை
ஒத்திவைக்கப்பட்டது
எறும்புகளின் நடை
மேடை தகர்க்கப்பட்டது
விட்டிகளின் ஓய்விடம்
கலைக்கப்பட்டது
பறவைகளின்
மாலை நேர மாநாடு
மாய்ந்து போனது
கிளை கைகளில்
இருந்த மோதிரங்கள்
பறிக்கப்பட்டன
தென்றல் வருடிய
இலைகளையெல்லாம்
அருவா கீறியது
இயற்கையின் இதயத்தில்
கோடாரி அம்புகள்
ஏவப