Gopinath Sadha - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Gopinath Sadha |
| இடம் | : chennai |
| பிறந்த தேதி | : 21-Jul-1989 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 26-Jan-2012 |
| பார்த்தவர்கள் | : 57 |
| புள்ளி | : 5 |
Thedi kondu irukiren!
மாலை நேரம் தனில்
சாலையோரமுள்ள தும்பை மரநிழலில்
சற்று கோபத்துடன்
நானும் காத்திருந்தேன் !!!
அந்த கள்ள விழி கொஞ்ச
செல்ல சிணுங்கலுடன்
காரணம் சொன்னபடி -அவள்
என்னை அனைத்துக் கொண்டாள் !!!
இருந்த கோபமெல்லாம்
இறக்கைப் பெற்றுச் செல்ல
சற்று மொழி யற்று
நானும் பறக்க நின்றேன் !!!
அமர்ந்த இடம் முழுக்க
சத்தமாய் இருக்க -அவள்
பேச்சின் தாக்கம் மட்டும்
நெஞ்சில் நகலிருக்கும் !!!
அவள் சின்ன விரலெடுத்து
மெல்ல விரல் கோர்த்து
நெஞ்சில் சாய்ந்த படி
நிலவை ரசித்திருந்தாள் !!!
அவள் கூந்தல் வருடிக்கொண்டே
நெற்றி முத்தமிட்டு
அசட்டுச் சிரிப்புடனே-நான்
அவளைப் பார்த்திருந்தேன் !!!!
மாலை நேரம் தனில்
சாலையோரமுள்ள தும்பை மரநிழலில்
சற்று கோபத்துடன்
நானும் காத்திருந்தேன் !!!
அந்த கள்ள விழி கொஞ்ச
செல்ல சிணுங்கலுடன்
காரணம் சொன்னபடி -அவள்
என்னை அனைத்துக் கொண்டாள் !!!
இருந்த கோபமெல்லாம்
இறக்கைப் பெற்றுச் செல்ல
சற்று மொழி யற்று
நானும் பறக்க நின்றேன் !!!
அமர்ந்த இடம் முழுக்க
சத்தமாய் இருக்க -அவள்
பேச்சின் தாக்கம் மட்டும்
நெஞ்சில் நகலிருக்கும் !!!
அவள் சின்ன விரலெடுத்து
மெல்ல விரல் கோர்த்து
நெஞ்சில் சாய்ந்த படி
நிலவை ரசித்திருந்தாள் !!!
அவள் கூந்தல் வருடிக்கொண்டே
நெற்றி முத்தமிட்டு
அசட்டுச் சிரிப்புடனே-நான்
அவளைப் பார்த்திருந்தேன் !!!!
இரக்கமற்ற இரவில்
வெறுமையில் நிறைகிறது மனம்
புயல் உரசிய கரையில்
புதைந்து கிடக்கிறது களம் !
யாருமற்ற தனிமையில்
வலிமையை திரட்டுகிறேன்
போர்க்கள நெறிகளை மறந்துவிட்ட
புயலை எதிர்த்து !
உடைந்த வானத்துத் துகள்களில்
கரைகிறது துணிவு
சிதைந்த என்னை தட்டி எழுப்பவென
யாசிக்கிறேன் ஒரு பூங்காற்றை !
ஒரு ஸ்பரிசத்தின் தைரியத்தில்
என் சினம் கொண்ட வீரத்தால்
மீண்டும் சேகரிக்கிறேன்
விதியால் உருகுலைந்த என்னை !!!
ஒருமுறை அவள் ஒரு
பார்வை பார்த்ததும்
என் இருஇமை மூடியும்
பார்வை தெரியுதே !!!
பூக்களின் சிணுங்கலாய்
அவளும் பேசிட
சாரல் போல் நெஞ்சில்
சலனம் தூறுதே !!!
அவளை ஒப்பிட
உவமைகள் தேடி
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகிறேன் !!!
மலரும் காலையில்
நகரும் பேருந்தில்
என்னை நானே
தேடி திரிகிறேன் !!!
எதையோ நினைத்து அவள்
சிரித்திடும் வேளையில்
அந்த எண்ணம் 'நான்' என
நெஞ்சம் தவிக்கிறேன் !!!
நான் இறங்கும் இடம்
எனை கடந்து சென்றதை
அவள் இறங்கிய பின்பே
நானும் உணர்கிறேன் !!!
மாதுவை மறக்க
மதுவினை திறந்தேன் ..
மதுக்குவளையிலும்
மாது அவளின் பிம்பமே..
தென்றல் தாலாட்டும்
தேனிக்கள் கூடும் சோலையினை
தேடி அடைந்தேன்..
சோலையிலும் அவள்
சேலை வாசமே என்னுள் நுகர்கிறேன்..
பௌர்ணமி இரவினில்
பயணிக்கின்றேன் பாதைகளில்..
பௌர்ணமி நிலவிலும்
பாவை அவள் முகமே...
இரக்கமற்ற இரவில்
வெறுமையில் நிறைகிறது மனம்
புயல் உரசிய கரையில்
புதைந்து கிடக்கிறது களம் !
யாருமற்ற தனிமையில்
வலிமையை திரட்டுகிறேன்
போர்க்கள நெறிகளை மறந்துவிட்ட
புயலை எதிர்த்து !
உடைந்த வானத்துத் துகள்களில்
கரைகிறது துணிவு
சிதைந்த என்னை தட்டி எழுப்பவென
யாசிக்கிறேன் ஒரு பூங்காற்றை !
ஒரு ஸ்பரிசத்தின் தைரியத்தில்
என் சினம் கொண்ட வீரத்தால்
மீண்டும் சேகரிக்கிறேன்
விதியால் உருகுலைந்த என்னை !!!