இலக்கியா பால்சாமி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இலக்கியா பால்சாமி |
இடம் | : இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 16-Jan-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 116 |
புள்ளி | : 6 |
தமிழ் விரும்பி
பறவைகள் கூடு கட்டாத
எம் நிலங்களின் தேகமெங்கும்
அரங்கேறுகிறது சாதிக் கூத்து.
மழை பெய்து நிரம்பாத கிணறுகளில்
கல் பெயர்ந்து...முளைத்த சிறு மரங்களில்
படிகிறது சாதி எச்சிலின் ஆதித் துளி.
உறைந்த நீரெனச் சரியும்
காதலின் முற்றத்தில்..
நீலம் குடித்த மலர்கள்
இறுதியின் மகுடியில் சாய்ந்தாட...
வஞ்சிக்கப்பட்ட அன்பு...
இடுக்குகளிலிருந்து முகிழ்த்து
மூச்சுத் திணறுகிறது.
பிரியும் கணம் தாங்காது...
புதைந்த கண்ணிவெடியென
பதற்றமடைகிறது உணர்வுகளின் வெப்பம்.
இடம் பெயரும் நிலவு
கோடையின் சுழலாய் மேலெழும்ப
உயிர்கள் எப்போதோ உருகியிருந்தன.
ஒரு துன்பியல் சித்திரமென
தாழைக் காட்டின் வா
தனித்து விடப்பட்ட என் நிமிடங்கள்
தாகம் தீர்க்க தவிக்கின்றன......
கடிவாளம் இடப்பட்ட என் கைகள்
கட்டவிழ்க்க காத்திருக்கின்றன...
வசைபாடும் வாய்கள் மத்தியில் என்
இதழ்கள் சிரிக்க மறுக்கின்றன...
பூட்டி வைத்த பொக்கிஷமாக என்
நாட்கள் நகர்கின்றன.......
கனவில் மட்டுமே கடல் தாண்டிப்
பறக்கிறேன்......
நிஜத்தில் வாசல் தாண்ட
வழியில்லை........
கண்களின் ஈர்ப்பால் கவர்ந்தாய்
என்னை இரும்பாக.......
மூக்கின் கூர்மையால் சாய்த்தாய்
என்னை மரமாக.......
உதடுகளின் வரியால் இயற்றினாய்
என்னை கவியாக......
இதயங்களின் பிரிவால் மறந்தாய்
என்னை மௌனமாக........
வேதிப் பிணைப்புகள் இன்றி வேதியியல் இல்லை........
சாதிப் பிணைப்புகள் இன்றி
சங்கடம் இல்லை.............