சனல் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சனல் குமார்
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  16-Nov-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Mar-2022
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  6

என்னைப் பற்றி...

என் பேனாவின் காதல்........

என் படைப்புகள்
சனல் குமார் செய்திகள்
சனல் குமார் - சனல் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2022 7:08 pm

முடிந்து போன மணல் பரப்பின்

எல்லையில் நின்று

நீளமாய் பார்க்கையில்..!

என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்

கடலின் அலறல்கள் கூறும்...,



காணாத உலகில் வாழும்

கடவுள்கள் பொய் என்று....!

மேலும்

ஐயா. நான் உளறிய உளறல்களை வாசிக்க ஒரு நிமிடம் ஒதுக்கிய உங்களுக்கு மிக்க நன்றி. மேலும் அதில் கருத்து பதிவிட தாங்கள் செலவழித்த உங்கள் நேரத்தை பார்த்து நான் வியக்கிறேன். 28-Mar-2022 5:46 pm
சுவாமி விவோனந்தர் சொன்னார் I dont talk to fools .உமது அதிஷ்டம் சுனாமி வந்து தூகவில்லை அதனால்தான் அற்ப மனிதர்கள் கடல் பேசியதாக உளருகிறார்கள் . 26-Mar-2022 12:49 pm
நண்பரே சனல் குமார்...... அதே நீங்கள் கூறும் கடல் அலைகள் ஓயாமல் ஓம்கார ஒளி அலைகள் காதில் சேர்ப்பதை கேட்க வில்லையா நம் உலகில் நம்மை வாழவைக்கும் கடவுள் தன் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் மனிதன் கண்ணிற்கு புலப்படாது நம் கண்ணிற்கு புலப்படவில்லை என்றால் இருப்பவை இல்லாது போவதில்லை ஒவ்வோர் உற்பத்தியின் பின்னே உற்பத்தி செய்வாரும் உளர் என்று அறிதலே ஞானம் வெற்றிடமாம் வானில் எப்படி வந்தன கோள்களும் கோடான கோடி விண்மீன்களும் அண்டசராசரங்களும் ........சிந்தித்தால் புரியும் கடவுள் யார் என்பதும் 24-Mar-2022 2:04 pm
சனல் குமார் - சரவணன் சா உ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2022 11:41 pm

முக்கண்ணனுக்கும்
மூச்சிறைக்கும் - எம்
மூத்தோர் எழுதிய
முத்தமிழை படித்தால்...

மேலும்

வெளிவிருத்தம் குருவாம் தமிழ்தந்த குறுமுனியா தரித்த --- மண்ணடா திருவள்ளுவர் உருவாக்கிப் பிறந்த முத்தமிழ் ---. மண்ணடா பெருங்கிழவி வழிகாட்டி இடுக்கண்நீத் தத்தமிழ் --- மண்ணடா இருள்குருட்டுப், பெரியார்மண் ணாயிதுப் பழந்தமிழ் -- மண்ணடா வரிக்கு வரி அடியெதுகை மூன்றாம் சிரில் மோனை வைத்து எழுதுவது சிறப்பு 25-May-2022 4:19 pm
நேரிசை வெணபா தங்கத் தவனச் சடைமுடி யோன்சிவனாம் அங்கமெலாம் பொன்மேனி யாம்கண்டார் -- எங்கள் திருமூலன் தூற்ற கெடுவீர் சிவனை பெருமகனார் கும்பிடும் சேர்ந்து 25-May-2022 3:53 pm
நேரிசை ஆசிரியப்பா நும்பெயர் சரவணன் சரியா றிந்த சரவணன் முக்கண் கொண்டச் சிவனார் முக்கண் ணைத்திறக் கவுண்டான ஆறுமுகக் கந்தவேள் சரவண முருகனே . முக்கண்ணனுக்கும் என்று நாலசைகொண்ட ஒரு சொல்லை ஒருவரி என்று சொல்லியிருக்கும் உமது தமிழ்த் திறமையை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழ் பேசவும் எழுதவும் வேண்டி 216 தமிழ் எழுத்துக்களை கற்றால் மட்டும் பாட்டெழுத முடியாது. தமிழுக்கு ஆசான் அகத்தியன் அகத்தியனுக்கு ஆசான் முருகன் முருகனுக்கு அண்ணன் விநாயக கணபதி அப்பன் ஐயன் சிவப்பார்வதி உமது முன்னோர் யாரென்று விவரம் சொல்லாது அவரின் புலமைத் திறமை சொல்லாது உமது முன்னோர்கள் முத்தமிழ் வித்தகர் ஏதோ எழுதினார்கள் என்றும் சொன்னீர். உமது முன்னோர்கள் யார்என்ன எதைப்பற்றி யாரைப் பற்றி எழுதினார்கள் அவைகள் என்ன நூலின் பெயர்கள் என்ன முதலில்அதைச் சொல்லுங்கள் அந்தப் பெயர் தெரியாத நூல்களை முக்கண்ணன் ஏன் படிக்க வேண்டும். முக்கண்ணன் முதலில் மூச்சு விடுகிறாரா இல்லையா என்பதையார் கண்டார் அவருக்கு எதற்கு மூச்சு வாங்க வேண்டும் புரிய வில்லையே தமிழில் தேவாரம் என்ற நூலை மூன்று சைவப் பெரியார்கள் ( ஈ வெ இராமசாமி இல்லை) நீர் சொன்ன முக்கண்ணனைப் பற்றி பலதிருமுறையில் ஆயிரக் கணக்கில் புகழ்ந்து பாடல் எழுதி யுள்ளார்கள். சத்தியமாக அதில் ஒருபாட்டும் உமக்குத் ரப்தெரியாது என்பது எனக்குத்தெரியும். மாணிக்க வாசகர் என்ற பாண்டிய நாட்டு மந்திரி இதே முக்கண்ணனை திருவாசக நூலில் பாடிப் புகழ்ந்தார் நீரோ எதையும் படிக்காது இலக்கணம் தெரியாது எழுதிய முதல் பாட்டு முக்கண்ணனுக்கும் மூச்சிறைக்கும் - எம் மூத்தோர் எழுதிய முத்தமிழை படித்தால்... வந்தவுடன் இந்த எழுத்துத் தளத்தில் கிறுக்கர் போல கிறுக்காது இலக்கணமாக பாட்டெழுதிப் பாராட்டு பெறுங்கள் 25-May-2022 3:28 pm
அருமை 25-Mar-2022 12:02 pm
சனல் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2022 6:09 pm

விம்மி விடைத்திடும்

பிதற்றிகொண்டே இருக்கும்

கேள்விகள் இல்லாத பதிலைத் தேடும்

காரணம் இல்லாமல் கலங்கும்

பின் காரணத்தைத் தேடும்

அம்மயப்பன் இருக்கயிலே

அண்டற்கு வேறு இடம் தேடும்



ஆளற்கு நாடுமுண்டு

அமர்ந்திட சிம்மாசனமும் உண்டு

ஆனாலும் அகதியாய் வாழும்

முட்டாள் அரசன்



அவன் பெயர் மனம்

மேலும்

சனல் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2022 12:12 pm

நினைவுகள் தவறினேன்

நிறங்களை உலவ விட்டாய்



கனவுகள் இழக்கயில்

நிஜத்தை படைக்கிறாய்



மூச்சடைக்கும் நாட்களில்

தென்றலாய்....



இன்னும் திணறுவேன்

தீர்வு மட்டும் நீ தான்....

மேலும்

சனல் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2022 9:59 pm

கிழிந்த சேலை நான்கு எடுத்து
சுற்றிப்படைத்த இடத்தில் இருந்து
நடுசாமத்தில் வரும்
குறட்டை ஒலி கூறும்
அதும் ஒரு வீடே....

மேலும்

சனல் குமார் - சனல் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2022 3:59 pm

என்றோ ஓர் நாள் கதைத்த கதைகள்...
நிபந்தனையற்ற புன்னகைகள்..
நிஜங்களாய் தோன்றிய பாடல்கள்...
உடைத்திட்ட ரகசியங்கள்..
உடையாத நாணங்கள்...

வேரற்ற காயங்களுக்கும்
கலங்கிய கருவிழிகள்...
நூறாயிரம் ஆசைகளும்..
ஓராயிரம் ஊடல்களும்...

கடந்து காலங்கள் ஆகியும்..
எண்ணூறு மாற்றங்கள் கண்டினும்..
அறியாத வெற்றிடம்....

யாரை தொலைத்த யாருடைய
வலிகளோ இவை......

மேலும்

சனல் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2022 7:08 pm

முடிந்து போன மணல் பரப்பின்

எல்லையில் நின்று

நீளமாய் பார்க்கையில்..!

என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்

கடலின் அலறல்கள் கூறும்...,



காணாத உலகில் வாழும்

கடவுள்கள் பொய் என்று....!

மேலும்

ஐயா. நான் உளறிய உளறல்களை வாசிக்க ஒரு நிமிடம் ஒதுக்கிய உங்களுக்கு மிக்க நன்றி. மேலும் அதில் கருத்து பதிவிட தாங்கள் செலவழித்த உங்கள் நேரத்தை பார்த்து நான் வியக்கிறேன். 28-Mar-2022 5:46 pm
சுவாமி விவோனந்தர் சொன்னார் I dont talk to fools .உமது அதிஷ்டம் சுனாமி வந்து தூகவில்லை அதனால்தான் அற்ப மனிதர்கள் கடல் பேசியதாக உளருகிறார்கள் . 26-Mar-2022 12:49 pm
நண்பரே சனல் குமார்...... அதே நீங்கள் கூறும் கடல் அலைகள் ஓயாமல் ஓம்கார ஒளி அலைகள் காதில் சேர்ப்பதை கேட்க வில்லையா நம் உலகில் நம்மை வாழவைக்கும் கடவுள் தன் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் மனிதன் கண்ணிற்கு புலப்படாது நம் கண்ணிற்கு புலப்படவில்லை என்றால் இருப்பவை இல்லாது போவதில்லை ஒவ்வோர் உற்பத்தியின் பின்னே உற்பத்தி செய்வாரும் உளர் என்று அறிதலே ஞானம் வெற்றிடமாம் வானில் எப்படி வந்தன கோள்களும் கோடான கோடி விண்மீன்களும் அண்டசராசரங்களும் ........சிந்தித்தால் புரியும் கடவுள் யார் என்பதும் 24-Mar-2022 2:04 pm
மேலும்...
கருத்துகள்

மேலே