Vijayakumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vijayakumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jan-2021
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  3

என் படைப்புகள்
Vijayakumar செய்திகள்
Vijayakumar - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2021 3:20 pm

இதுவா கூட்டுக் குடும்பம்

நேரிசை வெண்பாக்கள்

பஞ்சாயத் தைகூட்டி நாட்டாமை கேட்டதற்கு
அஞ்சாது சொன்னா னவனுமே ---. வஞ்சி
யவளுடன் மாற்றாளைத் தொட்டேன் விடேன்பார்
தவறாக்காப் பேனென் றனன்

சட்டமில்லை குற்றந்தான் கள்ள உறவினால்
கட்டாத்தா லிப்பிள்ளை பெற்றனள் -- கட்டியவள்
தட்டிக்கேட் டுத்தடுத்தாள் அட்டில் நுழையவள்
விட்டுக்கொ டுப்பாளா சொல்

தொட்டு விடத்தொட் டுவிடத் தொடரும்கைப்
பட்டுவிடப் பட்டு மலருமாம் -- தட்டா
நடக்குதப்பா அந்தக் கவிஞர் வாக்கும்
இடக்குமடக்கு என்று மிருக்கு


நீதிமன்றம் போகா வழக்கும்பஞ் சாயத்தில்
தீர்ப்புக் கலைவதைப் பார்


...........

மேலும்

'நல்ல குடும்பம்' என்பது வலிமிகாது (க்) வரும். நன்றி. 08-Feb-2021 12:18 pm
Vijayakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2021 7:43 pm

பாக்களும் ஓசைகளும்

(இன்னிசை வெண்பா)
செப்பலோசை தப்பாது செப்பமிடும் வெண்பாவில்;
துள்ளலோசை ஆசிரியத் துள்ளோடும்; தூங்கலோசை
வஞ்சியில் கொஞ்சிடும், வாஞ்சையொடு வாசித்துச்
சந்தக் கவிதை பழகு!

விஜயகுமார்
பினாங்கு, மலேசியா.

மேலும்

Vijayakumar - இமயவரம்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2021 1:21 am

பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றல் வீசும் செழுங்கவிதை; உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு – இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!

தோளை உயர்த்தித் தொடடாவவ் வானத்தை
வாளை உயர்த்தியிவ் வையங்கொள்! – மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.

தமிழென்னும் வாளெடுத்துச் சாதிவேர் சாய்த்துச்
சமயச் சடங்கெதிர்த்துச் சாடி – இமயச்
சிகரம்போல் நின்றொளிரும் செந்தமிழ்ப்பா வேந்தர்
புகழ்கொள் ப

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, விஜயகுமார்! 11-Feb-2021 5:53 am
நன்று 07-Feb-2021 7:23 pm
Vijayakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2021 2:06 pm

செங்கல்லினால் அல்ல​
செங்காந்தள் பூவினால்
கல்லறை செய்க​
காதலி மென்மையானவள்!

காதலுக்கு மூச்சிருந்தபோது
ஊரே தள்ளியிருந்தது;
மூச்சிழந்த​ பின்
உலகமே
வேடிக்கை பார்க்க வருகிறது!

தனக்குப் பிடிக்காதவனை - நீ
சமாதி என்பான்.

சமாதியான பின்
சாமி என்பான்.

கல்லறை என்பது
மாண்டவர்க்கு வைக்கும்
கிரீடமா?

வாழும் போது
அரையடி கூடத்
தன் பேரில் இல்லை;

இதோ
ஆறடி! - ஆனால்
ஆளத்தான் ஆளில்லை!

இந்த​ ஆறடி மட்டுந்தான்
வருமான​ வரி
தீண்டுவதில்லை!

காதலைக் கொன்று
கல்லறையைக் கொண்டாட​ வேண்டாம்!

பல்லாயிரம் பேர்களின் சுவாசம்
கல்லறையை மோப்பமிடுகிறது.

அவள்
கட

மேலும்

Vijayakumar - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2021 11:28 pm

தண்ணெழிலே என்ற சீரைக் கொண்ட இதழகல்
காரிகை ....!!!

தண்டை சிலிர்க்கச் சலங்கை யிசையதன் தண்ணெழிலே
கண்ணே கனிச்சாறே காதற் சிலையே கலையழகே
எண்ணங் களிலே இனிதாய் நிறைந்த இளங்கிளியே
செண்டை யதிரத் தென்றலி லாடிச் சிரித்தனையே ! !

சியாமளா ராஜசேகர்

மேலும்

இதழகல் என்றால் உதடுகள் ஒட்டாமல் அமையும் வார்த்தைகள். நன்று! 27-Jan-2021 8:59 pm
Vijayakumar - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2021 11:48 pm

பொழிப்பெதுகை அமைந்த பஃறொடைவெண்பா ...!!!

எத்திக்கும் முன்னிற்கும் இத்தரணி யேவியக்கும்
முத்தமிழின் பேரழகு முத்தொளிரும் - நித்தம்
களைப்பகற்றும் கன்னலாம் கன்னித் தமிழே
இளமையா யென்று மெளிதாய் - வளமையாய்
முப்பாலில் பூத்திருக்கும் முப்போதும் நெஞ்சள்ளிச்
செப்பனிடும் வாழ்வெனச் செப்பு.

சியாமளா ராஜசேகர்

மேலும்

இரண்டு தனிச்சொல் வந்திருக்கிறது. பஃறொடைவெண்பாவில் ஒன்றே வரும் என​ நினைத்தேன். 27-Jan-2021 8:53 pm
Vijayakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2021 9:34 am

படைக்கலங்கள் பதறுமம்மா பாவையின்
பார்வைகனம் பார்க்கையிலே!
படைத்தவன் பத்துவிரல் உதறுமம்மா
பாராத​ நேர்த்தியிலே!

கொடுத்து வைத்த கண்கள்
குழந்தையெனச் சிரிக்குதடி;
தொடுத்து வைத்த கவிதைகள்
தொட்டாச் சுருங்கியடி!

ஆடை குறைக்கும் தேவை
அரங்கத்தில் தேவையில்லை,
மூடிய​ மடல்கள் கலைக்க
மலர்களென்(று) ஆவதில்லை!

சேலை சூடியும் நீவா
சீவனில் சிலிர்ப்புப்;
பாலைப் பழிக்கும் பொழிப்புத்,
தென்னகத்தின் தனிச்சிறப்பு!

பாவினத்தில் பாவலர் பாடாத​
பூவினம் உண்டா?
வாவி நீரில் தரளும்
வாலை மலர்த்தண்டா?

அழகின் அழகென்று தலையில்
அலங

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே