Dr B Chandramouli - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Dr B Chandramouli
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Sep-2020
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  39

என்னைப் பற்றி...

நான் அமெரிக்காவில் 35 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து அங்கு மருத்துவராகப் பணியாற்றி விட்டு ஒய்வு பெற்றவன். சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்தவன். தமிழில் அதிக ஆர்வமுண்டு. இப்போது தமிழ்-ஆங்கில மொழிபெயர்ர்ப்புகளில் ஈடுபட்டுள்ளேன் (ஜாக் லண்டன் எழுதிய 'வைட் ஃபேங்' என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.). அவ்வப்போது கவிதைகளும் எழுதுவதுண்டு. இப்போதுதான் மரபுக் கவிதை எழுத முயற்சி செய்கிறேன்!!

என் படைப்புகள்
Dr B Chandramouli செய்திகள்
Dr B Chandramouli - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2024 8:57 am

பஃறொடை வெண்பா.
இயற்கை வளம் காப்போம்
------------------------------------
இயற்கை வளமதை ஏனோ அழித்தாய்
செயற்கைப் பொருளதனை வீதியிலே வீசுகிறாய்
காடெலாம ழித்தே மரமெலாம் தீயாக்கி
நாடெலாம் பல்பயிரும் நாம்வாழ நட்டதனால்
கார்மழை தந்த கருமேகம் இல்லாமல்
பார்முழு தும்வரண்டு ஏரிகுளம் வற்றி
புவிமகளும் வாடுகின்றா ளின்று

மேலும்

Dr B Chandramouli - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2024 9:19 am

நேரிசை வெண்பா
---------
இயற்கை வளமதனை யின்று தொலைத்தே
செயற்கைப் பொருளதனைச் செய்யீர் நயமுடன்
நல்லு லகம்வா ழவழிகாட்டும் என்பாக்கள்
எல்லா உயிர்க்கும் சிறப்பு

மேலும்

இருவிகற்ப நேரிசை வெண்பா (ஒழுகிசைச் செப்பல் ஓசை) இயற்கை வளமதனை யின்று தொலைத்தே செயற்கைப் பொருளதனைச் செய்யீர் - நயமுடன் நல்லுலகம் வாழ வழிகாட்டும் என்பாக்கள் எல்லா உயிர்க்கும் இனிது! 02-Apr-2024 5:36 pm
Dr B Chandramouli - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2024 5:34 pm

கலிவிருத்தம்
காய்-காய்-காய்-காய்

விண்ணின்நற் கொடையெனவே பொழிகின்ற அமுதமது
மண்ணில்நம் வாழ்வுக்கு உயிர்நீரு மதுவேதான்
தண்ணீர்க்கே பஞ்சமெனப் படுகின்ற பாடுகண்டே
கண்ணீரும் வந்திடுதே நன்நீரைச் சேமிப்போம் !

மேலும்

Dr B Chandramouli - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2024 12:51 pm

கலிவிருத்தம்
(காய் காய் மா காய்)


முதுமைக்கு முண்டன்றோ காதல் அந்நாளில்
பதுமைபோலி ருந்தவளின் வடிவு குலைந்தாலும்
பருவம்போ நாலுமவள் அன்பு குறையாதே
உருவமது மாறினாலும் வளரும் காதலிதே

மேலும்

கலி விருத்தம் (விளம் விளம் மா கூவிளம்) (மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது) சான்று: சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமசி வாயவே. (அப்பர் தேவாரம்) மேலேயுள்ள வாய்பாட்டில் ஒரு பாடல் முயற்சியுங்கள். 22-Mar-2024 5:16 pm
Dr B Chandramouli - Dr B Chandramouli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2024 2:25 pm

தெருவெங்கும் காளைகளாம் பலவண்ணக் கொம்புகளாம்
வருகையிலே அசைந்தாடும் கழுத்துமணி ஓசைகளாம்
துள்ளுமிளம் கன்றுகளைத் பசுஞ்சாணிப் பாத்தியதில்
தள்ளிவிட்டுக் கலைத்திடுவார்; பசுமாட்டைக் குளிப்பாட்டி
பொட்டிட்டுப் பொங்கலிட்டு மரியாதை செய்திடுவார்;
அக்காலம் கண்டகாட்சி கண்ணிலே நிக்குதய்யா!!
இக்காலம் காண்பதற்கு நம்நாட்டில் நல்லதோர்
குக்கிராமம் இல்லாமல் போய்விடுமோ? நாமும்தான்
தேடித்தான் பார்த்திடுவோம் இன்றே!!

மேலும்

பாராட்டுக்கு மிக்க நன்றி!! உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள். 16-Jan-2024 5:32 pm
இப்படி அந்தகாலத்தை நினைவுபடுத்த சில குக்கிராமங்கள் இருக்கும் என்றுதான் நானும் நினைக்கின்றேன் நண்பரே......நல்ல கருத்துள்ள படைப்பு,,,,,, பொங்கல் வாழ்த்துக்கள் 16-Jan-2024 5:00 pm
Dr B Chandramouli - Dr B Chandramouli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2024 7:15 pm

அந்நாளில் பல செந்நாப் புலவர்
பேனாவின்றிப் பென்சிலுமின்றி
காகிதமென்றொரு வெண்பொருளின்றி
ஓலையும் சீலையும் பலவும் கொண்டு
சிலம்பின் காதையும் சீதையின் காதையும்
போரின் கதையும் காதலின் கதையும்
வாழ்வின் முறையும் இன்னும் பலவும்
வெண்பா கலிப்பா பலபாக்கொண்டு
சந்தம் மிகுந்து பொருளும் மிகுந்து
இன்றும் படிக்க இனிதே வடித்தனர்
இன்றைய நாளில் நாமும் பலவித
மென்பொருள் கொண்டு பாவடித்திடினும்
மரபுக் கவிதை மறந்தே போனதோ?
அசையும் சீரும் தளையும் தொடையும்
இசையுடன் வடிப்போர் இன்னும் உண்டோ?
உரைநடையதனை நான்காய் மடித்தால்
கவிதையாகுமோ காண்பீர் நன்றே !


(இதுவும் மரபுக் கவிதையன்று)

மேலும்

அன்புள்ள டாக்டர் சந்திரமௌலி, தங்கள் பாடலில் எந்த மாற்றமும் இன்றி, ஈரசைச் சீர்களாக மட்டும் பிரித்திருக்கிறேன். எனவெ, இப்பாடல்: நிலைமண்டில ஆசிரியப்பா (ஒழுகிசை அகவல் ஓசை) அந்நா ளில்பல செந்நாப் புலவர் பேனா வின்றிப் பென்சிலு மின்றி காகித மென்றொரு வெண்பொரு ளின்றி ஓலையும் சீலையும் பலவும் கொண்டு சிலம்பின் காதையும் சீதையின் காதையும் போரின் கதையும் காதலின் கதையும் வாழ்வின் முறையும் இன்னும் பலவும் வெண்பா கலிப்பா பலபாக் கொண்டு சந்தம் மிகுந்து பொருளும் மிகுந்து இன்றும் படிக்க இனிதே வடித்தனர் இன்றைய நாளில் நாமும் பலவித மென்பொருள் கொண்டு பாவடித் திடினும் மரபுக் கவிதை மறந்தே போனதோ? அசையும் சீரும் தளையும் தொடையும் இசையுடன் வடிப்போர் இன்னும் உண்டோ? உரைநடை யதனை நான்காய் மடித்தால் கவிதை யாகுமோ காண்பீர் நன்றே! கூகிலில் ஆசிரியப்பா எனப் பதிந்து வாசியுங்கள்; தெளிவு பெறலாம். 25-Jan-2024 7:53 pm
நண்பர் ஜீவனுக்கு எனது நன்றிகள். இது எனது கன்னி முயற்சி. எபப்டியாவது ஒரு சில் மரபுக் கவிதைகளை எழுத ஆவல். நான் முறையாக் தமிழ் ஈஆள்ளஂஆ படித்தவன் அல்ல. இப்போதுதான் புலவர் குழந்தையின் 'யாப்பதிகாரம்' படிக்கிறேன்!! 16-Jan-2024 2:06 pm
அன்பு நண்பா.. உதய நிலவா.. உங்கள் வருத்தம் நெஞ்சில் பதிந்தது. உண்மை அது முகத்தில் அறைந்தது. எத்தனை பேருக்கு இன்று இலக்கணம் தெரியும்? எத்தனை பேருக்கு வெண்பா..கலிப்பா ..புரியும்? கவலை வேண்டாம். உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை பகிர்வதில் எவ்வழி ஆனாலும் அவ்வழி சரியே. மரபு கவிதை அதில் ஒரு வழி. உன் எண்ணம் சமுதாயத்தில் சிறு மாற்றம் கொண்டு வந்தால் அது வெற்றியே. கண்ணதாசன் எழுதாத காவியமா? கருத்தோவியமா? கவலை வேண்டாம்.தொடர்ந்து எழுதுங்கள். பயணம் தொடருங்கள். வாழ்த்துக்கள். 16-Jan-2024 11:01 am
மேலும்...
கருத்துகள்

மேலே