nagaa - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : nagaa |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 08-Sep-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 0 |
மனிதன் பாதி மிருகம் பாதி !
என் மேல்
ஏன் இத்தனை கோபம்?
அன்னை உனை
அறிமுகப்படுத்தியபோது
அலட்சியம் செய்தவள் நான்
அக்காள், தங்கை
அத்தைப்பெண் என அனைவரும்
உன்பெருமையை பேசியபோதும்
செவிசாய்க்காதவள் தான்.
இல்லத்தரசியானதும்
இனிதேஅறிந்தேன் உன்னருமை!
பாசக்கரம் நீட்டி
பலமுறை அழைத்தும்
பார்க்காததுபோல்
பரிதவிக்கவிடுகிறாய்.
எப்போது வருவாய் நீ
எனதருமை சமையலே......
கவலையுடன் நான்
கண்ணில் நீருடன்...என் குடும்பத்தார்.
என்மௌனங்களும் துக்கங்களும்
உன்னால் உருவானதா?
ஆச்சரியமாய் இருக்கிறது
மௌனிக்கவைத்து விட்டாய்
மனதை சோர்வடையச்செய்துவிட்டாய்
எதுவுமேபுதிதாக வென்றுவிடுவதில்லை
துளித்துளியாய்....ஊற்றெடுத்து
ஒருசேர வீழ்வதுதான் நீர்விழ்ச்சி
எண்ணங்களும் அப்படித்தானே...
ஏனோ இப்பொழுதுதான் தெரிகிறது
படிக்காமல் தேர்வெழுதும் மாணவியாய்!
ஏனடா கண்ணா?
என் உள்ளம் எதிர்பார்த்து
மௌனமாய் வலிக்கிறது
மெல்லிய சலனங்கள் அன்றி
அழுத்தமான நிகழ்வுகளாய்
ஒவ்வொரு காட்சியும்
ஊனமாய் உணர்கிறேன்
எனக்களித்த பாதையில்
ஏனோவென்று நடந்திட்டு
எதிர்திசை நோக்கி நான்
சிலசமயம் சிந்தனையில்
சித்தப்பிரமையாய்..
சிங்காரநினைவுகள் சிதறிட்டு...
காட்டாற்று வெள்ளக்கரை
காய்ந்த்திட்டு பாலையானதுபோல்
என்ன செய்ய ...நான்
என் காதில் கூறிவிடு
வழிவந்து விடைகேட்கிறேன்
வாழ்வில் யாவும் அநித்தியமாய்
உன்னிடமே உரைத்திட்டு
உன்னிடமே உயிர்விட்டு
வரையரை தேடும் வாழ்வாய்.....
யாவுமே எனக்கு யாசகம் ஆகிவிட்டதா?
கண்ணா எனை
காணமல் செய்து விடு
என் இனிய தோழியே!
நன்றிகள் பலவாகி
நானுரைக்கும் ஒர் மடல்!
ஏதோ சொல்லத்துடிக்கிறேன்
எழுத்துக்கோர்வைகள்
எனை ஏளனம் செய்தபடி……
கட்டுக்குள் அடக்கமுடியுமா
அவளின் கரிசனத்தை என………
முயற்சிக்கிறேன்….
முழுதாய் முடியாவிட்டாலும்…..
இப்பொழுதெல்லாம்
சிறகு முளைத்திட்டு
சிரித்தபடி பறந்திட்டு
சீராய் சுவாசிக்கிறது
என் இதயம்!
தூரம் தொலைதூரம்
தொலைபேசி இதழோரம்
இருந்தாலும் நீ என்னருகில்!
புல்வெளிப்பூக்களில்
காண்கிறேன் உன் சிரிப்பை….
உள்ளத்தில் தோன்றியதை
உள்ளபடி உரைத்திட்டால்
உண்மையான ஆறுதலாய்
உயர்வை மட்டுமே
உன்னதமாய் எடுத்துரைக்கும்
உபயக்காரி!
ஆயிரம் சுமைகளை
அகத்தே சுமந்த