பறை ஓசை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பறை ஓசை |
இடம் | : Germany |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 174 |
புள்ளி | : 5 |
பால்நிறம் அழகிய தோற்றம் என்று எண்ணுவீரோ,
சிவந்த வானில் மெல்லிய முகம் கண்டீரோ,
இரவை ஆழ வந்த விண்ணின் சுடரோ,
வட்ட வடிவம் எண்ணில் கண்டு சொக்கினீரோ.
விண்கற்கள் வீழ்த்தும் என் நிலை மாறவில்லை,
வாழ்வின் துயரங்கள் இருந்தும் ஆண்மை மாறவில்லை,
இருண்ட சமுதாயம் கொண்டும் ஒளி கொண்ட சுடரானோம்,
தழும்புகள் இல்லா போரில் வெற்றி யுண்டோ - நன்னெறியே.
சிட்டுக்குருவியின் கூட்டம் கொண்டு,
விதி ஒன்று யெழுதிவிடு,
சீறிடும் பாம்பின் பற்கள் இரண்டையும்,
மதி யெனும் பாறையில் மோதவிடு.
விஷமி யென்றும் தீயசக்தி யென்றும்,
பிளவுண்ட நாவில் கூறிடுவார்,
களம் ஒன்று கொண்டு கயவர்,
முகம் எருச்சாம்பல் பூசிவிடு.
வீழ்வதும் பின்பு எழுவதும்,
நாம் தினம் காணும் ஒரு சகாப்தமே - தமிழா.
துணை என்று கொடுத்தாய்,
அம்மனை என்று வடித்தாய்,
அழகு என்று படைத்தாய்,
இடங்கழி மனம் எய்து,
அரிவை இழிவு செய்து,
சிற்பி உன்னை இகழ்ந்து,
பெருமை கொண்டு வாழ்வேனோ இறைவ.
காரமற்ற மிளகும்,
வானமற்ற உலகும்,
அடவியருத்த மண்ணும்,
மடந்தைக்கற்பருக்கும் பேய்மனமும்,
எம் நாட்டின் பெருமை அன்றே,
ஆண் அவதாரம் அழியும் முன்னே,
காக்க அருள் புரிவாய் பெருமானே.
இரு மனம் ஒரு மனம் கூட,
அவ்வொரு மனம் ஓர் உயிர் ஆக,
காலவன் கையில் உள்ள ஓவியம்,
உதரம் பெருத்து வரமென இன்றது,
உம அருளே.