siven19 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : siven19 |
இடம் | : Banting Malaysia |
பிறந்த தேதி | : 19-Oct-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 113 |
புள்ளி | : 47 |
இயற்கை, கலை, வரலாறு விரும்பி
#cve19
நொண்டும் சேவல்
சீனர்கள், ஆண்டுகளை 12 ஆகப் பிரித்து ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மிருகத்தை குறிப்பார்கள். அவ்வகையில் நான் சேவல் ஆண்டில் பிறந்தேன். சிறு வயது முதல், சேவல்களை உன்னிப்பாகக் கவனிக்கவும் செய்தேன்...
வீட்டின் அருகில் சிலர், கோழிகளை வளர்த்தனர். சில சண்டைக் கோழிகளும் இருந்தன. நீண்ட கால்கள் கொண்டதால் நடப்பதற்கு கஷ்டப்படும். ஆனால், சுலபமாக ஓடும். பொதுவான சேவல்களும் இருக்கும். அதில் ஒன்று, கருநீல வால், சிவப்பும் மஞ்சலும் கலந்த இறக்கை, நல்ல தடியான உடலுடன் தனியாக உணவைத் தேடி அலையும். பெரும்பாலும், என் வீட்டின் அருகில் ஒரு புதரின் கீழ் ஓய்வெடுக்கும். வலது கால் சண்டையில் அடிபட்டதால், நொண்ட
அன்பான உலகம் கேட்டேன்,
ஆயுதம் அற்ற நாட்டை கேட்டேன்,
இயலாதவருக்கு உரிமைகள் கேட்டேன்,
ஈசனை ஒரு முறை பார்க்க கேட்டேன்,
உயிர் பிரியும் வரை உழைக்கக் கேட்டேன்,
ஊரே செழிக்க வனங்கள் கேட்டேன்,
எட்டிப் பிடிக்கும் நிலவைக் கேட்டேன்,
ஏணியில்லா கல்வி கேட்டேன்...,
ஐயம் அற்ற மதங்கள் கேட்டேன்...
ஔவயாரிடன் பேசிடக் கேட்டேன்,
ஃக்கரையான உறவுகள் கேட்டேன்..
#siven19
அன்பான உலகம் கேட்டேன்,
ஆயுதம் அற்ற நாட்டை கேட்டேன்,
இயலாதவருக்கு உரிமைகள் கேட்டேன்,
ஈசனை ஒரு முறை பார்க்க கேட்டேன்,
உயிர் பிரியும் வரை உழைக்கக் கேட்டேன்,
ஊரே செழிக்க வனங்கள் கேட்டேன்,
எட்டிப் பிடிக்கும் நிலவைக் கேட்டேன்,
ஏணியில்லா கல்வி கேட்டேன்...,
ஐயம் அற்ற மதங்கள் கேட்டேன்...
ஔவயாரிடன் பேசிடக் கேட்டேன்,
ஃக்கரையான உறவுகள் கேட்டேன்..
#siven19
அழியப்போவதை அன்றே படி....
அதிகரிப்பதை அன்றாடம் படி.....
அங்கேயே இருப்பதை...
அமைதி காத்து படி...
எட்டும் தெரிய.
எட்டிப் படி.
பார்ப்பதும் படிப்பே...
பழகுவதும் படிப்பே...
முகர்வதும் படிப்பே...
முடியாததும் படிப்பே...
கேட்பதும் படிப்பே...
இதை அறிந்து
பகிர்வதும்
படிப்பே....
#siven19
📚📚📚📚📚
"டேய் வெட்டுகிளி..!!"
தன் தாத்தாவிடம் கேட்காது, அவரின் சைக்கிளை ஓட்டிவந்த அந்தப் பையன், வெட்டுகிளியை அழைத்தான். அழைத்தான் என்பதைவிட, தெருவே அதரும் படி அலரினான்.
"வரன் டா!!!" என காலுக்கு எட்டிய செருப்பை அவசர அவசரமாக மாட்டிக் கொண்டு வெட்டுகிளி ஓடிவந்தான்.
" யேன் டா கத்துர? அம்மா காதுல விழுந்தா அப்புரம் அடிக்கும் " என தன் நண்பன் செந்திலைக் கடிந்து கொண்டு வெட்டுகிளி, மிதிவண்டியில் ஏறிட , அவசர - அவசரமாக இடத்தை காலி செய்தனர்.
" சோமு இனிக்கு மாட்டுனான் டா, எத்தன தக்க வெச்சுருக்கே? " என செந்தில் வெட்டுகிளியைப் பார்க்க, தன் அரைக்கால் சாட்டை இரண்டு பக்கமும் தக்கைகள் நிறைந்து இருப்பதை உறுதி
""மீண்டும் சந்திப்போமா"" என்று வார்த்தையை சொல்லிக்கொண்டு சென்றவன் பின் அவனது அழைப்பும் வரவில்லை செய்தியும் வரவில்லை என முணுமுணுத்துக் கொண்டே அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் பிரியா.
பிரியா பிரியா நேரம் என்ன ஆச்சு வந்து சாப்பிடு என காலை உணவு சாப்பிட அம்மா அழைக்க இரும்மா.......... வரேன் என கூறிக்கொண்டே கைப்பேசியின் அருகே அமர்ந்து கொண்டு நகத்தை கடித்துக் கொண்டே எதை எதையோ யோசனை🤔 செய்து கொண்டிருந்தாள்.அப்பொழுது
""உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்...
என்னை நீ ஏற்றுக்கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன் ""
என கைப்பேசி மணி ஒலிக்க சிரித்தவாறே கைப்பேசியை எட
ஆம்.. வயது முப்பதை தாண்டி விட்டது.
காதலிகளும் பிள்ளைகளைப் பாலர் பள்ளியில் சேர்க்கத் தொடங்கி விட்டனர்...
எனது 32 வயதிற்குள் திருமணம் செய்யவில்லையேல் என்றும் திருமணம் வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்.
அடுத்த வருடம் 32 ஆகிவிடும்.
ஏதோ அம்மாவின் தோழியர் ஒருவருக்குத் தெரிந்தவராம். பெண் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை. முதல் முறையே சரியாக வேண்டும் என முடிவு செய்து விட்டேன். தாடிய 'shave' பண்ணுடா என அம்மா ஒரே நச்சரிப்பு. திருவள்ளுவர் ஏன் ஆண்கள், சிங்கம் போல் தாடி, மீசை, நீண்ட முடி வைத்திருக்க வேண்டும் என ஒரு குறல் எழுதியிருக்கலாம். பல தடவை வேண்டியிருக்கேன். உண்மையில் ஆணுக்குத்தான் உடை
பத்ர காளி ஆட்டம்
மனிதர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் சோழ மண்டலத்தில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் காளியாட்டம் தெய்வ நம்பிக்கையோடு கலைநயம் மிகுந்த கலைஞர்களின் ஈடுபாட்டோடு நடைபெறும் காளியாட்டம் இந்த சிறுகதை மூலம் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த களியாட்டம் என்னும் திருவிழா அனைத்து சோழ மண்டலத்தை சார்ந்த ஊர்களிலுள்ள பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழா தொடங்குவதற்கு முதல் நாள் காப்பு கட்டுவார்கள் அந்த காப்பு கட்டிய பிறகு யாரும் வெளியூர் செல்ல கூடாது திருவிழா முடியும் வரை. இந்த திருவிழா அனைத்து திருவிழாக்களிலும் இருந்து மாறுபட்டது. கடவுள் மனிதர் மூல