எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. சிலபள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சிகரமாக இருக்கின்றது. அதே வேளை பல பள்ளிகளில் மிகக் குறைவான புள்ளிகள் பெற்று (Border Marks) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். மேலும் பலர் தேர்ச்சி பெற இயலாது தோல்வியைத் தழுவியுள்ளனர். இதில் தேர்ச்சி பெறத்தவறிய மாணவர்களின் உண்மையான நிலை என்ன தெரியுமா? அவர்களால் சரளமாக தமிழ் பாடம் வாசிக்க இயலவில்லை. வாய்ப்பாட்டில் தடுமாற்றம், ஆறாம் வகுப்பில் வரும் அடிப்படை கணித அறிவு அவர்களிடம் இல்லை. ஆங்கிலத்தில் போதிய இலக்கண அறிவு இல்ல (...)
நடந்து முடிந்த தமிழக தேர்தல் முடிவுகளில் நோட்டாவிற்கு மாத்திரம் 561244 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதாவது 1.3 சதவிகித வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. பல தொகுதிகளில் பல வேட்பாளர்கள் சில நூற்றுக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார்கள். அதற்கு நோட்டாவுக்கு பதிவான வாக்குகளும் ஒரு காரணம். இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 1.3 சதவிகிதம் வாக்குகள் பதிவானதிற்கான காரணம் என்ன? தாங்கள் விரும்பும் கட்சி சரியான வேட்பாளரை நிறுத்தவில்லை என்ற கோபமா? இல்லை தாங்கள் விரும்பும் கட்சி பொருத்தமில்லாத கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என்ற (...)
மதம்
பண்புப் பெயரா
காரணப் பெயரா
ஏனென்றால்
அமைதிக்கான
மார்க்கத்தில்
பயணிக்கும்
சாதுக்களில் சிலர்
சில நேரங்களில்
மதங்கொண்ட
யானைகளாக
மாறிவிடுகின்றார்கள்!
தேர்தல் ஆணையத்தின் சட்டவிதிகளின்படி தமிழகத்தில் காவல்துறையினர் வாகன சோதனை செய்கின்றனர். வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி ஐம்பதாயிரத்திற்கு மேல் கொண்டு செல்பவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்கின்றனர். பொதுவாக மளிகைப்பொருள், மரம், மாடு வாங்கச்செல்லும் வியாபாரிகள் இந்தச் சோதனையில் சிக்கிக்கொள்கின்றார்கள். தன் அன்பு மகளின் திருமணத்திற்காக நகை வாங்கச் செல்லும் கிராமத்து அப்பாவிகளும் பணத்தை பறி கொடுத்து விடுகின்றார்கள். காவல்துறை உரிய ஆவணம் கொடுத்து பணத்தை மீட்டுக்கொள்ளுங்கள் என்கின்றார்கள். உழவு மாடுகள் வாங்க கடன் வாங்கி ஒரு லட்சம் கொண்டு செ (...)