சூர்யா- கருத்துகள்

காதல். அதன் வரையறை என்னவென்று என்னயுடைய கருத்தை பதிவு செய்யும் முன் காதல் என்றால் தங்களுக்கு என்ன என்று சொல்லக் கூடுமோ?

நான் இங்கு விடை சொல்ல வரவில்லை, எனக்கு தெரிந்த சில விளக்கங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கனவு.
நினைவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் கலவை. எங்கு தொடங்கியது? எவ்வாறு முடிந்தது? சாத்தியமா? முழுதாக ஞாபகம் உள்ளதா?
உணர்வுகளுக்கு செவி கொடுப்பது முக்கியம் ஆனால் தெளிவில்லாத எதையும் முழுதாக நம்பக்கூடாது

கடந்தகால கீறல்கள் உடலளவு வழிதருவதில்லை நினைவுகள் மட்டுமே வழியுயூட்டுகிறது அதுவும் மனதளவு மட்டுமே. காயம் எங்கே ? தன் கண் படுமளவா? பிறர் கண் படுமளவா? இடம், பார்வை பொறுத்தது. எதுவாயினும் அதை உடை போட்டு மறைக்கலாம். சில நேரங்களில் உடையே அதை குஞபாகம் படுத்தும் அளவுக்கு இருக்கும், ஆயினும் புத்திசாலித்தனமான தேர்வு காய் கொடுக்கும் .
உவமையயை தாண்டி உண்மைக்கு வருவோம்.

மறக்க முயற்சி செய்து யாரும் எதையும் மறந்தது இல்லை. பிற விஷயங்களில் கவனம் தந்து குஞபாகம் வைத்துகொள்ள வேண்டிய சிலவற்றை நாம் மறப்பதுண்டு. மறப்பதே சில நேரங்களில் மன்னிப்பாக காணப்படும்.

என்ன செய்வது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கலாம் இல்லாமல் போகலாம். அனால் உங்களிடம் உங்களுக்கான பதில் இந்நேரம் உருவாயிருக்க வேண்டும்.

நன்றி , என் கருத்திற்கு கண் பாய்தமைக்கு.

அன்பு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அர்த்தம். ஒரு நிலையான அர்த்தம் இல்லா ஓர் சொல்.
ஆசை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை. அதுவும் நிலை இல்லாத ஒன்று.
வேறுபாடு ?
அன்பென்பது நிகழ் காலம், ஓர் உணர்வு.
ஆசை என்பவது எதிர் காலம், அது ஓர் எதிர்பார்ப்பு.

அன்பு ஆசை , இரண்டுமே சந்தோசத்திற்கான ஒரு கருவி. பிறர் கழிப்படைந்தாலோ , பிறர் உன்னை களைப்படைய செய்தாலோ அதை அறியலாம்.



சூர்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே