thamizharasu- கருத்துகள்

நான்,
வைத்திருக்கும் அன்புக்கும்...
வடிக்கும் கண்ணீருக்கும்...
தகுதியானதா,
உன் அன்பு என
சந்தேகப்பட்டதுண்டு...
என் நினைவே இல்லாத
உன்னை,
நான் மட்டும் ஏன்
நினைக்க வேண்டும் என
கோபப்பட்டதுண்டு...
என் காதல் உயர்ந்து...
காலத்தால் அழியாதது...
அது ஒன்று போதும்-என்று
சந்தோஷப்பட்டதுண்டு...
எப்படியெல்லாமோ
மனசு வலித்த போதும்
மருந்தானவை,
உன் நினைவுகள் மட்டுமே...


thamizharasu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே