venkatasubramanian- கருத்துகள்
venkatasubramanian கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [54]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [37]
- மனக்கவிஞன் [31]
- Ramasubramanian [30]
- கவின் சாரலன் [25]
நானும் ஓர் கடனாளி
ஈரைந்து மாதங்கள் எ(ன்)னை
கருவில் சுமந்தவள்...!
கல்லறை செல்லுமட்டும்
என்னை அவள் இதயவறையில் சுமப்பவள்..!
கருவறையில் சுமந்ததற்காய்
இன்று நீ கூடையை
தலையிலே சுமக்கிறாய்..!
நான் பாடசாலை போக நீ...
பள்ளம் மேடு ஏறுகிறாய்..!
நான் காலில் செருப்பணிய
நீயோ முள்ளிலே
காலை வைத்தாய்...!அம்மா....!
நான் வாழ்வில்
கரையேர நீயோ
விரதம் கடைபிடித்தாய்...!
நான்...! குடை பிடித்து செல்ல
குளிரிலே குளிர் காய்கிறாய்.!அம்மா...!
போதுமம்மா....
நீ பட்ட துயருக்கு விலைதான்
என்னம்மா.....!!!
என்ன பந்தமிது....!
ஏனிந்த உறவு....!
உன் உள்ளம் இங்கு
யாருக்கும் வருமா ...?அம்மா...!
உனக்காக வாழ்வேன் நான்...!
உன் இயந்திர கைகளுக்கு
ஓய்வளிப்பேன்..!
உறுதி கூறுகிறேன்
உன் வேதனையின் சாட்சியாய்................!!!!!