yazhmani- கருத்துகள்

துயரங்கள் சூழ்ந்த உலகத்திலே
தடைகள் பல தாண்டியே
சுழலும் மாயப்பொருள்கள் நாம் ...

சுற்றத்தின் இழப்பை மனங்கொள்ளாது
கனவாகுமே நேற்றைய நிகழ்வுகள்
என்றும் அது துணையாகுமே...

ஆற்றில் மிதக்கும் மரமாய்
போகும் வழியோடு போய்
எதையோ பற்றி ஒதுங்குவோம்...

ஏதோ ஒரு பிடிப்போடு
என்றும் அணையாத நினைவோடு
எம் வாழ்வை நகர்த்துவோம்...

விழிகளில் நீர் தோய
ஈடுகட்ட முடியாத இழப்பை
தவிப்போடு அனுதாபம் செலுத்துகின்றேன்...


yazhmani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே