எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் எழுத்துக்கள் (Tamil Letters) - நம்மொழிக்கு தமிழ்...

தமிழ் எழுத்துக்கள் (Tamil Letters) - நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது எப்படி?

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன அவை,

உயிரெழுத்துக்கள் - 12
மெய்யெழுத்துக்கள் - 18
உயிர்மெய்யெழுத்துக்கள் - 216
ஆய்த எழுத்து - 1

உயிரெழுத்துக்கள் 12 + மெய்யெழுத்துக்கள் 18 + உயிர்மெய்யெழுத்துக்கள் 216 + ஆய்த எழுத்து 1 = 247

தமிழ் படி

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது.

தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை.

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன.

எழுத்துக்களின் வகை

உயிர் எழுத்து
மெய் எழுத்து
எழுத்தோரன்ன குறியீடுகள் (ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்)

எழுத்துக்களின் விரிபு

ஒவ்வொரு பிறப்பிடமும் (எழுத்து) அவ்விடத்தைச் சார்ந்த பல்வேறு ஒலியம்களை குறிக்கும்.

எழுத்துக்களின் பெருகல்

உயிர்மெய் எழுத்து

உயிரெழுத்துக்கள்:

தமிழ் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12. உயிர் எழுத்து தனித்து இயங்கும் சொல் ஆகும் (ஈ, மா, வை) உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை.

எழுத்து பெயர் சொல்

அகரம் அம்மா
ஆகாரம் ஆடு
இகரம் இலை
ஈகாரம் ஈட்டி
உகரம் உரல்
ஊகாரம் ஊஞ்சல்
எகரம் எலி
ஏகாரம் ஏணி
ஐகாரம் ஐந்து
ஒகரம் ஒட்டகம்
ஓகாரம் ஓணான்
ஒள ஒளகாரம் ஔவையார்

பயிற்சி : உயிர் எழுத்துக்கள் எழுதுவது எப்படி?

மெய்யெழுத்துக்கள்:

தமிழ் மெய்யெழுத்துக்கள் மொத்தம் 18.

மெய்யெழுத்து பகுப்பு

க் வல்லினம்
ங் மெல்லினம்
ச் வல்லினம்
ஞ் மெல்லினம்
ட் வல்லினம்
ண் மெல்லினம்
த் வல்லினம்
ந் மெல்லினம்
ப் வல்லினம்
ம் மெல்லினம்
ய் இடையினம்
ர் இடையினம்
ல் இடையினம்
வ் இடையினம்
ழ் இடையினம்
ள் இடையினம்
ற் வல்லினம்
ன் மெல்லினம்

பயிற்சி : மெய் எழுத்துக்கள் எழுதுவது எப்படி?

உயிர்மெய்யெழுத்துக்கள்:

தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் மொத்தம் 216.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள
க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

ஆய்த எழுத்து:

தமிழ் ஆய்த எழுத்து மொத்தம் 1.

எழுத்து பெயர்
ஆய்த எழுத்து

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது எப்படி?

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.

ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.

ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.


உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்

(படர்க்கை),

(தன்னிலை),

(முன்னிலை)

என்பது பாவாணர் கருத்து.


தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி

த் + அ கூடி 'த' வாகவும்,

ம் + இ கூடி 'மி' யாகவும்,

ழ் + உ கூடி 'ழு' வாகவும்

என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

பதிவு : Adam Biju1
நாள் : 16-Dec-14, 5:33 pm

மேலே