Adam Biju1 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Adam Biju1
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jan-2012
பார்த்தவர்கள்:  2908
புள்ளி:  50

என் படைப்புகள்
Adam Biju1 செய்திகள்
Adam Biju1 - எண்ணம் (public)
16-Dec-2014 5:33 pm

தமிழ் எழுத்துக்கள் (Tamil Letters) - நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது எப்படி?

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன அவை,

உயிரெழுத்துக்கள் - 12
மெய்யெழுத்துக்கள் - 18
உயிர்மெய்யெழுத்துக்கள் - 216
ஆய்த எழுத்து - 1

உயிரெழுத்துக்கள் 12 + மெய்யெழுத்துக்கள் 18 + உயிர்மெய்யெழுத்துக்கள் 216 + ஆய்த எழுத்து 1 = 247

தமிழ் படி

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது.

தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை.

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன.

எழுத்துக்களின் வகை

உயிர் எழுத்து
மெய் எழுத்து
எழுத்தோரன்ன குறியீடுகள் (ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்)

எழுத்துக்களின் விரிபு

ஒவ்வொரு பிறப்பிடமும் (எழுத்து) அவ்விடத்தைச் சார்ந்த பல்வேறு ஒலியம்களை குறிக்கும்.

எழுத்துக்களின் பெருகல்

உயிர்மெய் எழுத்து

உயிரெழுத்துக்கள்:

தமிழ் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12. உயிர் எழுத்து தனித்து இயங்கும் சொல் ஆகும் (ஈ, மா, வை) உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை.

எழுத்து பெயர் சொல்

அகரம் அம்மா
ஆகாரம் ஆடு
இகரம் இலை
ஈகாரம் ஈட்டி
உகரம் உரல்
ஊகாரம் ஊஞ்சல்
எகரம் எலி
ஏகாரம் ஏணி
ஐகாரம் ஐந்து
ஒகரம் ஒட்டகம்
ஓகாரம் ஓணான்
ஒள ஒளகாரம் ஔவையார்

பயிற்சி : உயிர் எழுத்துக்கள் எழுதுவது எப்படி?

மெய்யெழுத்துக்கள்:

தமிழ் மெய்யெழுத்துக்கள் மொத்தம் 18.

மெய்யெழுத்து பகுப்பு

க் வல்லினம்
ங் மெல்லினம்
ச் வல்லினம்
ஞ் மெல்லினம்
ட் வல்லினம்
ண் மெல்லினம்
த் வல்லினம்
ந் மெல்லினம்
ப் வல்லினம்
ம் மெல்லினம்
ய் இடையினம்
ர் இடையினம்
ல் இடையினம்
வ் இடையினம்
ழ் இடையினம்
ள் இடையினம்
ற் வல்லினம்
ன் மெல்லினம்

பயிற்சி : மெய் எழுத்துக்கள் எழுதுவது எப்படி?

உயிர்மெய்யெழுத்துக்கள்:

தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் மொத்தம் 216.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள
க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

ஆய்த எழுத்து:

தமிழ் ஆய்த எழுத்து மொத்தம் 1.

எழுத்து பெயர்
ஆய்த எழுத்து

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது எப்படி?

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.

ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.

ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.


உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்

(படர்க்கை),

(தன்னிலை),

(முன்னிலை)

என்பது பாவாணர் கருத்து.


தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி

த் + அ கூடி 'த' வாகவும்,

ம் + இ கூடி 'மி' யாகவும்,

ழ் + உ கூடி 'ழு' வாகவும்

என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

மேலும்

Adam Biju1 - எண்ணம் (public)
11-Dec-2014 11:51 am

Mahakavi subramanya bharathiyar family album

மேலும்

Adam Biju1 - எண்ணம் (public)
11-Dec-2014 11:07 am

கவிதையில் பல்பு கொடுத்த பாரதி - பார்த்ததில் பிடித்தது

மேலும்

Adam Biju1 - எண்ணம் (public)
11-Dec-2014 11:05 am

கோயிலுக்கு போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி...

தெய்வத்தை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி...

தெய்வம் நமக்கு அருள்புரிய தடையேதும் இல்லை...

பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே போதும், தெய்வ அருளுக்குப்

பாத்திரமாகி விடுவோம்...!

மேலும்

Adam Biju1 - Adam Biju1 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2014 1:07 pm

தூங்கும் போதும்
கண்ணை விட்டு
அகலா அழகு

சோம்பி நிற்கும் கோயில்
சிலையும் ஆவலுடன்
காத்திருக்கும் உன்
வருகைக்கான அழகு

கோலம் போடும் தரையும்
தரைபெறும் கோலமும்
உனக்காக ஒன்றுடன் ஒன்று
மோதிக் கொள்ளும் அழகு

சின்னக் குழந்தையும்
உன் கன்னம் தொட்டு
சிரித்துப் பார்க்கும் அழகு

சனி முதல் வியாழன்
வரை இல்லாத அழகு
வெள்ளிக்கிழமை அதிகாலைகளில்
மட்டும் உனக்கு வருவது எப்படி?

மேலும்

தவிர , தலைப்பை இத்தனை நீளமாக இட வேண்டாமே !! மறுபரிசீலனை புரியவும் !! 26-Nov-2014 1:58 pm
நன்றி தோழரே 26-Nov-2014 1:32 pm
நல்ல ரசனை !! தூங்கும் போதும் - தூங்கும் பொழுதும் கோயில்சிலையும் - கோயிற்சிலையும் பத்திப்பிரிப்பதில் கூடுதல் கவனம் கொள்ளவும் !! நிறைய படிக்கவும் !! நிறைய பதிக்கவும் !! வாழ்த்துக்கள் !! 26-Nov-2014 1:31 pm
Adam Biju1 - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2014 2:39 pm

எழுத்து இணையவழி விளம்பரம்

"எழுத்து வலைதளத்தில் விளம்பரம் எனும் புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது" என்பதை எழுத்து குழுமத்தினர் பெருமையுடன் பகிர்கிறோம்.

தங்கள் விளம்பரத்தின் விளம்பர பட்டிகை திட்ட அமைப்பையும்(Banner design), வரி விளம்பரம் தொடர்பான பொருளையும்(Text ad content) எழுத்து விளம்பர பகுதியில் சேருங்கள். இது உங்களின் தொழில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

1000 பார்வைகளுக்கான செலவு ரூபாய்.1/- மட்டுமே..



மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

மேலும்

Adam Biju1 - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 5:39 pm

எழுத்து.காம் தோழர் / தோழியர் அனைவர்க்கும் பக்ரித் வாழ்த்துக்கள்

மேலும்

Adam Biju1 - Adam Biju1 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2014 5:35 pm

பாசம் என்றால் என்ன?

மேலும்

வழுக்கும். 24-Sep-2014 3:02 pm
இது இன்றையஉறவுகளுக்கு ஒரு அடகு பொருளாய் மாறிவிட்டது!பாசம் இது எதிரி கூட அருந்தக்குடாத ஒரு கொடிய விஷம் [இன்றையவுலகில்] 22-Sep-2014 7:30 pm
பாசம் என்பது உதடுகளில் இருந்து வருவது அல்ல ..... மனதில் இருந்து வருவது ...... 20-Sep-2014 2:02 pm
உள்ளங்களின் உறவுகளில் தன்னலம் தவிர்த்து ,உணர்வுகளை மதித்து ,பிற உரிமைகளை ஆதரித்து தன்னலம் அற்ற பொது நலத்தோடு வாழ்வது -பாசத்தின் அடையலாம்!!! 20-Sep-2014 11:37 am
Adam Biju1 - Adam Biju1 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2014 5:32 pm

Sikkanam+Semippu=Selvam
சிக்கனம் + சேமிப்பு = செல்வம்

இதை பற்றி கவிதை / கட்டுரை வேண்டும்..

மேலும்

சிறந்த கருத்து 20-Sep-2014 2:03 pm
தேவைகளைக் குறைத்தால் சிக்கனம் தேவைக்கு எடுத்து வைத்தால் சேமிப்பு இரண்டும் பெருகினால் செல்வம் 20-Sep-2014 1:12 pm
பகிர்தலுக்கு நன்றி தோழா 20-Sep-2014 10:47 am
பகிர்தலுக்கு நன்றி தோழா 20-Sep-2014 10:47 am
Adam Biju1 - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2014 1:15 pm

கவிமுகில் அறக்கட்டளை மற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து நடத்தும்

"ஈடில்லாக் கவிஞர் ஈரோடு" விழா அழைப்பிதழ்...

மேலும்

விருதினை பெரும் எழுத்து தளத்தின் எழுத்தாணி திரு .ராஜேஷ் குமாருக்கு எழுத்து தள கடைகோடி கவிஞனின் இதய பூர்வ வாழ்த்துக்கள் .... 26-Oct-2014 8:06 am
விருது பெரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ......... 20-Sep-2014 8:13 pm
விருது பெறும் எழுத்து.காம் நிர்வாகி திரு.ராஜேஷ் குமாருக்கு மீண்டும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் ராஜேஷ். !!! :) 19-Sep-2014 8:49 pm
ஆம்....நான் அப்படியே கண்டேன்...கருத்தும் பதிந்துள்ளேன்... 19-Sep-2014 6:50 pm
Adam Biju1 - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 1:15 pm

கவிமுகில் அறக்கட்டளை மற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து நடத்தும்

"ஈடில்லாக் கவிஞர் ஈரோடு" விழா அழைப்பிதழ்...

மேலும்

விருதினை பெரும் எழுத்து தளத்தின் எழுத்தாணி திரு .ராஜேஷ் குமாருக்கு எழுத்து தள கடைகோடி கவிஞனின் இதய பூர்வ வாழ்த்துக்கள் .... 26-Oct-2014 8:06 am
விருது பெரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ......... 20-Sep-2014 8:13 pm
விருது பெறும் எழுத்து.காம் நிர்வாகி திரு.ராஜேஷ் குமாருக்கு மீண்டும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் ராஜேஷ். !!! :) 19-Sep-2014 8:49 pm
ஆம்....நான் அப்படியே கண்டேன்...கருத்தும் பதிந்துள்ளேன்... 19-Sep-2014 6:50 pm
Adam Biju1 - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 11:56 am

நல்ல கவிதை .
நன்றி - ஆனந்தவிகடன்

மேலும்

நன்றிங்க . 19-Sep-2014 10:39 pm
நல்ல பகிர்வு!! 19-Sep-2014 8:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

user photo

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
mmaniae

mmaniae

kamuthi
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (6)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
பீனு

பீனு

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

பீனு

பீனு

தூத்துக்குடி
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
mmaniae

mmaniae

kamuthi

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே