Mariya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Mariya
இடம்:  chennai
பிறந்த தேதி :  05-Dec-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Apr-2014
பார்த்தவர்கள்:  275
புள்ளி:  88

என் படைப்புகள்
Mariya செய்திகள்
Mariya - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2022 10:58 pm

நிழலின் அசைவுக்கு பகலவனின் ஒளி தேவை..

இலையின் அசைவுக்கு காற்றின் அனுமதி தேவை..

அசைவின்றி இசை பிறக்காது
இசையின்றி இவ்வுலகம் இயங்காது

கிடைத்த சொந்தங்களில் தொடரும் பந்தங்கள் சில
தொடரும் பந்தங்களில் தொடர போகும் சொந்தங்கள் சில

மாற்றங்கள் தொடரும்
தொடரும் மாற்றங்கள் தான்
உன் வாழ்கைக்கான ஏற்றங்கள்...

மேலும்

Mariya - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2021 4:37 pm

உன்னோடு பேச வேண்டும்
மணிக்கணக்கில் உன் குரல் கேட்க வேண்டும்
ஒவ்வொரு நொடியும் இனிக்க வேண்டும்
விடியற்காலையில் புல்மேல் உள்ள
பனித்துளி போல் நான் மிதக்க வேண்டும்
காலம் என்ற கள்வனின்
கைபிடியிலிருந்து மீள வேண்டும்
எண்ணிக்கையில்லா எண்ணங்களோடு
உன் கரம் பிடித்து நடக்க வேண்டும்
உன் உயிராய் நானிருக்க
என் உணர்வாய் நீயிருக்க
நாம் என்ற நாட்குறிப்பினுள்
நம் நாட்கள் நகர வேண்டும்

மேலும்

Mariya - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2017 10:20 am

கண்களில் ஏதோ ஒரு தவிப்பு
இன்பத்தை இழப்பது போல் ஓர் ஏக்கம்

சின்ன சின்ன உரசல்களுக்கும்
சிலிர்த்திட்டு வரும் கோபம்

பாதை மாறிய பகலவனின்
பகைமையில் தோன்றிய
பௌர்ணமியின் அழகை
ரசிக்க மறந்து
ஆழ்ந்து சிந்திக்கும் நேரம் ,
யோசனையிலோ ஒன்றுமில்லை !!!

ஜோதிடராய் ,வருங்காலத்தை
வர்ணிக்க துடிக்கும் உணர்வு

அந்த மூன்று நாட்களுக்கும்
அறிகுறியான குறிப்புகள்
இவைகள் ...

முடியவில்லை
மூச்சடைக்க முடியவில்லை
சுவாசிக்கும் காற்றும்
கள்வனை போல் கழுத்தில்
இறுக்கிட்டு நிற்கிறது

பெண்ணின் பிறப்பில்
என்ன ஓர் ரகசியம் இது ??

உடலில் உதிரம் உறைய
உறக்கம் களைந்து
உளியை கொண்டு ஊ

மேலும்

என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை சகோதரி ... மனதை பிழியும் வார்த்தைகள்.... 25-May-2017 11:41 am
Mariya - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2017 11:52 pm

நீரின் வழி நிலமறியது
என் உணர்வின் வலி
உன் நினைவறியது ?

கடலின் எழிலை ரசித்தேன் !
காற்றின் இசையை ரசித்தேன் !
மண்ணின் மணத்தை ரசித்தேன் !
மழலையின் மொழியை ரசித்தேன் !
வானின் வண்ணத்தை ரசித்தேன் !
வானவில்லின் வடிவத்தை ரசித்தேன் !
என்னை வடிவமைத்த அன்னையை ரசித்தேன் !
அன்னைக்கு பின் உன்னையே ரசித்தேன் !

உன் ஞபாகங்கள்
என் உடலில் கை ரேகையானது
உயிரில் உணர்வானது

ஒரு தடவை கூட
தோன்றவில்லையா உனக்கு ?
உன் நிழல் நான் தானென்று..

உன்னால் ,உலகம் அறிந்தேன்
சகஜமாய் பேசும் ஆற்றல் அடைந்தேன்
நாகரீகத்தோடு நகர பழகி கொண்டேன்
முகத்தில் நவரசமும் உணர்ந்தேன்
அகத்தில் அன்பைஉயிர் பித்தேன்

மேலும்

நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) Sugumar Surya மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Sep-2015 12:07 am

குடத்தில் நீர்
சுமந்து போகிறாய்..
உன்
இடுப்பேறிய குளம்
இன்பத்தில் ததும்புகிறது.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ
நேற்றுக்குடையின்றி
நனைந்த தெருவில்
இன்று காளான் பூத்திருக்கிறது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உன்னிடம்
கேள்வி கேட்கும் ஆசிரியர்கள்
கிளி ஜோசியக்காரனை
நினைவூட்டுகிறார்கள்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பூக்கடையில்
பேரம் பேசுகிறாயே..
நீயும் ஒரு பூதானே.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ உன் வீட்டு மாடியில்
நின்று பட்டம் வ

மேலும்

அழகு ,,,,,மிக அழகு....வாழ்த்துக்கள் 08-Feb-2016 6:18 am
மிக்க நன்றி நண்பரே 26-Oct-2015 7:55 am
மிக்க நன்றி நண்பரே 26-Oct-2015 7:55 am
பூக்கடையில் பேரம் பேசும் பூ ? மென்மையான ...மேன்மையான...வரிகள் 21-Oct-2015 1:31 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Sugumar Surya மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Sep-2015 5:41 pm

பள்ளமெனும் உள்ளத்தில் சிகரமானாள் தோழி
பிள்ளையில் கற்ற நட்பு மரணம் வரை பந்தம்
காலங்கள் புயலைப் போல் கோரமாய் வீசினாலும்
நட்பெனும் விருட்சத்தை வேர் சாய்க்க இயலாது.
***
ஆணும் பெண்ணும் உயிராய் நட்புகொள்வது பாவமா?
மகன் தாயின் மடியில் உறங்குவது தப்பாகுமா?
காமம் என்ற ஈனச் சொல்லால் மகிமையான
இதய ஆலயங்களில் வாழும் நட்பை கறையாக்க இயலாது.
***
அவள் கொண்டு வரும் அன்னத்தை
நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன்.
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால்
அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள்.
***
வலியெனும் காயங்கள் நெஞ்சை உடைத்தால்
நிம்மதிக்கு மருந்தாய் தோள் கொடுப்பாள்.
என் மடியில் தோழி உறங்கும் ப

மேலும்

என் கவிச்சமையலை உண்டதில் நானும் ஆனந்தம் கொண்டேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Dec-2015 2:06 pm
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால் அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள். என் மடியில் தோழி உறங்கும் போது இவள் என் மகள் என்றும் நினைக்கக்கூடும். மிகவும் ரசித்த வரிகள்..................................... எனக்கு மிகவும் பிடித்த வரிகள் தோழா!!!!!!!!!!!!! 14-Dec-2015 2:02 pm
என் கவிச்சமையலை உண்டதில் நானும் ஆனந்தம் கொண்டேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 10-Dec-2015 6:33 am
அவள் கொண்டு வரும் அன்னத்தை நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன். என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால் அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள். *** நான் மிகவும் ரசித்து ருசித்து விட்டேன் தோழா.....................அருமையான வரிகள் 10-Dec-2015 6:27 am
Mariya - இப்ராஹிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2015 7:16 pm

ஆயிரம்
முகங்களிலும்
உன்னதை
மட்டும்
தேடி
சலிக்கும்
கண்கள்
என்னது.............,

மேலும்

ஆஹா !!! 20-Aug-2015 6:32 pm
ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2015 1:30 pm

உள்ளமெல்லாம்
ஒரு உறவு
உயிரினில் உலவ
உருகிய விழிகள்
இதயத்தில் நுழைய
யாரவன் என்று
மனமும் கேட்க
நனவு என்று
கனவினைக் கலைக்கின்றேன்.....

உன் நினைவினை மறக்கவே

மேலும்

மிகவும் அருமை...... 26-Dec-2015 11:58 pm
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்துவிட்டீர்கள் ......தோழி !!! 13-Aug-2015 6:24 pm
அது முடியாத செயல் 12-Aug-2015 4:24 pm
அழகான வரிகள் 09-Aug-2015 8:34 pm
Mariya - Mariya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2014 6:58 pm

குறிஞ்சி பூ !
இது 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மலர்ந்துவிடும்
ஆனால் ,இந்த நட்பு எனும் பூ
18 வருடங்களாகியும் என்வாழ்வில் இதழ் விரியாத மலராகவே இருக்கிறது??
ஏக்கங்களோடு ,
ஒரு நட்பின் தேடல் !!!!!

மேலும்

ஏன் என்னாச்சு 10-Mar-2015 3:06 pm
Mariya - நிஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2014 2:56 pm

உழைக்க மறுத்த
நம் உடல்களுக்கு
எப்படித் தெரியும்
வியர்வை முத்துக்கள்
எவ்வளவு
விலை மதிப்பானவை
என்று?

உடற்பயிற்சி மறுத்து
ஊனமான நமக்கு
எப்படித் தெரியும்
வியர்வை முத்துக்கள்
எவ்வளவு
விலை மதிப்பானவை
என்று?

விரல் நுனியில் கணினியோடு
வாழ்க்கையான நமக்கு
எப்படித் தெரியும்
வியர்வை முத்துக்கள்
எவ்வளவு
விலை மதிப்பானவை
என்று?

குளு குளு அறையிலே
கொஞ்சிடும் நமக்கு
எப்படித் தெரியும்
வியர்வை முத்துக்கள்
எவ்வளவு
விலை மதிப்பானவை
என்று?

நடப்பதற்கு காலிருந்தும்
நம்பிக்கையே வாகனமாகிப்போன
நமக்கு
எப்படித் தெரியும்

மேலும்

இது கவிதை அல்ல உண்மை கவிதைகள் பொய் நிறைந்தது அருமையான வரிகள் 19-Oct-2014 5:38 pm
தங்களது கருத்துக்களால் அகமகிழ்ந்தேன்........மிக்க நன்றி ஐயா....தாமதமான என் பதிலுக்கு மன்னிக்கவும் 11-Oct-2014 12:12 pm
நிஷாவின் இக்கவிதையைப் படித்ததும் பலருக்கு வியர்த்திருக்குமே ! திறமைகளைத் தொடர்ந்து காட்டு பலருக்கும் வியர்க்கும்படி! 06-Oct-2014 8:38 am
நன்றி ராஜேஷ் 02-Oct-2014 9:33 pm
Mariya - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 9:07 pm

மழை பெய்து
ஒரு பூ
நனையலாம் !
ஆனால்
இங்கே,
வெயில் பெய்து
ஒரு பூ
நனைகிறதே !

என்ன விழிக்கிறாய் ?

உன்
வியர்வையைத்தான்
சொல்கிறேன் !

=====================

பட்டப்பகல் நேரப்
பனித்துளிகள்
எந்தப் பூவிலும்
சாத்தியமில்லை !
ஆனால்
பூவே
உன்னில் அது
சாத்தியம் !

=====================

வியர்க்கிறாய்
நீ !
வியக்கிறேன்
நான் !

=====================

வியர்வையில் நனைந்த
உன் ஆடைகளை
வெயிலில் காயப்போடு !
வெயிலாவது
கொஞ்சநேரம்
வாழ்ந்து கொள்ளட்டும் !

======================

உப்புக்கரிப்பதென்பது
வியர்வையின்
விதி !
ஆனால்
உனக்கு மட்டும்
அதை
இனிப்ப

மேலும்

அருமையான கவிதை.... 14-Jun-2015 11:37 pm
நல்லாயிருக்கு கவிதை 14-Jun-2015 11:30 pm
மிக அழகு.. 20-Dec-2014 11:15 am
அடடா.. தேவ்... காதல் பாடல் எழுத சினிமாவில் பஞ்சமாம். போகலாமா ? ஹஹ்ஹஹா 23-Sep-2014 8:17 pm
ஜின்னா அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-Sep-2014 6:18 am

[ முன் குறிப்பு : ஒரு நாள் விழி இழந்தோர் மறு வாழ்வு மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பிறவியிலேயே பார்வை இழந்திருந்தாலும் அவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருந்ததைக் கண்டு அதிசயித்தேன். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் சொற்களுமே தன்னம்பிக்கை மொழிகளாய் இந்த கவிதையில்...]

இறைவன் வரைந்த ஓவியத்தில்
முற்றுப்பெறாத ஓவியப் பிழை நாங்கள் - ஆனால்
சூரியனுக்கே சவால்விட்டவர்கள்
நீயே வந்தால் கூட
எங்கள் கண்களுக்கு ஒளி கொடுக்க முடியாதென்று...

இருளைக் கண்டு பயந்து ஓடும்
சாதாரண மனிதர்களாய்
எங்களை எண்ணிவிடாதீர்கள்
நாங்கள்
இரவையே நேசிக்கும்
மனித விண்மீன்கள்

கண்ணாடியில் முகம் பார்த்து
தங்கள் அழகை ரசிக

மேலும்

இரவையே நேசிக்கும் மனித விண்மீன்கள். வெளியே வெளிச்சம் உள்ளே இருட்டு எங்களுக்கு வெளியே இருட்டு உள்ளே வெளிச்சம் . அருமை தோழரே..! அவர்களில் ஒருவருக்கேனும் வாசித்துக்காட்டவேண்டிய கவிதை.மனித விண்மீன்கள்.! அருமை. 15-Jul-2015 9:24 am
மிக்க நன்றி தோழரே... தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மகிச்சி... 07-Jun-2015 1:27 am
கண்களால் கண்ட நிகழ்வை அப்படியே!! வரிகளாக்கி உள்ளீர் வரிகளே இவ்வளவு வலிக்குது என்றால் அந்த நிகழ்வு உங்களை எப்படி பாதித்து இருக்கும் என்று என்னால் உணரமுடிகிறது 07-Jun-2015 1:21 am
மிக்க நன்றி தோழமையே... தங்கள் வருகைக்கும் வழங்கிய கருத்திற்கும்.... 02-Dec-2014 1:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சிகுவரா

சிகுவரா

சென்னை
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல

இவர் பின்தொடர்பவர்கள் (51)

rambo

rambo

madurai
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
kailash

kailash

Tenkasi

இவரை பின்தொடர்பவர்கள் (51)

மேலே