எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று காலை அலுவலகம்... எண்ணங்கள் எல்லாம் ஊரைச் சுற்றியும்...

இன்று காலை அலுவலகம்... எண்ணங்கள் எல்லாம் ஊரைச் சுற்றியும் கொண்டாட்டங்களை சுற்றியும் பறந்தபடியே இருந்தது.. ஒரு கலவையான மனநிலையில் இருந்தேன். எனது பக்கத்து இருக்கை என் தோழி திருமதி. ரேஷ்மா வந்தார்கள். " சரவணா... பொங்கல் நல்வாழ்த்துக்கள் " என்று சொல்லி எனக்காக அவர்கள் செய்து வந்திருந்த பொங்கலை கொடுத்தார்கள். இனமென்று பார்த்தால் அவர் கிறித்துவர். மொழியென்று பார்த்தால் அவர் கொங்கணி பேசுபவர். இங்கு இனம் மதம் என்று குறிப்பிடுவது எதற்காக என்றால் அதனை சரியாக கையாளத் தெரியாத சில அறிவிலிகளுக்காகவே....

அவர் எங்களுக்காக அதிகாலையில் எழுந்து அவ்வளவு சிரத்தையோடு பொங்கல் வைத்துக் கொண்டு வந்தார்.
இப்படியான நண்பர்களோடு மனிதர்களோடு பொங்கலைக் கொண்டாடியதில் எனது இந்த வருடப் பொங்கல் அர்த்தமுள்ள பொங்கலாகி விட்டது. மகிழ்ச்சி.. இது போன்ற கொண்டாட்டங்களே மனிதம் வளர்க்கிறது அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பதிவு : கட்டாரி
நாள் : 15-Jan-15, 7:53 am

மேலே